சுரேஷ் ரெய்னா குடும்பத்தில் அரங்கேறிய திகில் சம்பவம்..!! கொலையாளிகள் பிடிபட்டனர்

First Published Sep 21, 2020, 5:52 PM IST

கொடூர தாக்குதல்... துடிக்க.. துடிக்க.. கொலை அலறல் சத்தம்.. நெஞ்சை உலுக்கும் சின்ன தல வீட்டு சோகம் 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2020 தொடரில் கலந்துகொள்ள துபாய் சென்றார். ஆனால் அங்கிருந்து அவசர அவசரமாக இந்தியா திரும்பிய அவர் ஐபிஎல் 2020 தொடரில் இருந்து நீங்கினார்
undefined
சொந்த பிரச்சனை காரணமாக ரெய்னா நாடு திரும்பிவிட்டார் என்ற தகவலை தவிர வெறு எந்த காரணமும் இத்தனை நாட்களாக வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அனைவரின் கேள்விக்கும் விடைகொடுத்துள்ளார் ரெய்னா
undefined
தனது ட்விட்டர் பக்கத்தில், தன் மாமா, அத்தை மற்றும் அவரது இரண்டு மகன்களும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே மாமா உயிரிழந்துவிட்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாமா மகனும் நேற்றிரவு இறந்துவிட்டார்.
undefined
எனது அத்தை தற்போது தீவிர சிகிச்சையில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார்
undefined
ஆனால் அன்றிரவு உண்மையில் என்ன நடந்தது, யார் இதை செய்தார்கள் என்ற எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை. பஞ்சாப் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டார்
undefined
இதனை தொடர்ந்து தீவிர விசாரணை செய்த பஞ்சாப் போலீஸ் மூன்று நபர்களை கைது செய்து வழக்கை முடித்தது
undefined
click me!