பவுலிங் போட அதிக நேரம் எடுத்துக்கிட்டா இதை மட்டும் பண்ணிடுவோம்னு சொல்லுங்க..! ஒருபயலும் லேட்டாக்க மாட்டான்

First Published Nov 30, 2020, 4:39 PM IST

 பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டால், அபராதம் விதிப்பது குறித்து ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்வது முன்பெல்லாம் அரிதான சம்பவமாக இருக்கும். ஆனால் இப்போது அடிக்கடி நிறைய போட்டிகளில் அந்த பிரச்னை எழுகிறது.
undefined
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதால், இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.
undefined
இந்நிலையில், அதுவே போதாது என்று ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்ன், இந்த விவகாரத்தில் மிகவும் கண்டிப்பு காட்ட வேண்டும். ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஓவருக்கும் 25 ரன்கள் அபராதமாக விதிக்க வேண்டும். முதல் ஒருநாள் போட்டியில், முதல் இன்னிங்ஸ் முடிந்திருக்க வேண்டிய நிலையில் இந்திய அணி 46 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
undefined
click me!