அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தன் பங்கிற்கு சென்னை வீரர்களை கதி கலங்கச் செய்தார். அவர், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஜுரெல், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.