ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று.
undefined
விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் அணியில் இருந்தும், அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் வலுவாக இல்லாததும், வீரர்களை சேர்ப்பதும் நீக்குவதுமாக, நிச்சயமற்ற தன்மையிலான அணியாக ஆர்சிபி திகழ்ந்ததும் தான் அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம்.
undefined
சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை போல வலுவான அணியை கட்டமைக்க தவறியதுதான் ஆர்சிபியின் தொடர் சொதப்பலுக்கு காரணம்.
undefined
இந்நிலையில், இந்த சீசனை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, 2016க்கு பிறகு இந்த சீசனில் தான் ஆர்சிபி அணி நல்ல பேலன்ஸான அணியாக இருப்பதாக கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.
undefined
கோலியின் இந்த கருத்து குறித்த பேசியுள்ள கம்பீர், சரியான லாஜிக்கை பிடித்து முறையான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
undefined
இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கம்பீர், 2016க்கு பிறகு இந்த சீசனில் தான் ஆர்சிபி அணி நல்ல பேலன்ஸான அணியாக இருப்பதாக கோலி கூறியிருக்கிறார். 2016லிருந்து கோலி தான் அந்த அணியின் கேப்டனாக இருக்கிறார். அப்படியென்றால், அணி நல்ல பேலன்ஸான அணியாக இல்லை என்பதை அவர் ஏற்கனவே உணர்ந்திருந்தால், ஒரு கேப்டனாக அதில் அவர் அதிக அக்கறையும் ஈடுபாடும் காட்டியிருக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
undefined