அதிரடியாக நீக்கப்பட்ட ரிஷப் பண்ட்: டெல்லி கேபிடல்ஸின் நிர்வாக மாற்றம் தான் காரணமா?

Published : Oct 30, 2024, 08:12 AM IST

Rishabh Pant Removed From Delhi Capitals: ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வருவதால் டெல்லி கேபிடல்ஸ் அணியில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ரிஷப் பண்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அவர் அணியில் இருந்து விலக வாய்ப்புள்ளது.

PREV
14
அதிரடியாக நீக்கப்பட்ட ரிஷப் பண்ட்: டெல்லி கேபிடல்ஸின் நிர்வாக மாற்றம் தான் காரணமா?
Rishabh Pant, Delhi Capitals, IPL 2025

Rishabh Pant Removed From Delhi Capitals: ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வருகிறது. அதற்கு முன்பாகவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர்களான வேணுகோபால் ராவ் மற்றும் ஹேமங் படானி ஆகியோர் முறையே கிரிக்கெட் இயக்குநர் மற்றும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி சிறப்பாக செயல்படவில்லை. நிர்வாக மாற்றத்தின் காரணமாக, பல முக்கிய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படலாம்.

24
Delhi Capitals, IPL 2025, IPL 2025 Auctions

ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜிஎம்ஆர் குழுமம் ஆகியவை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர்கள். ஐபிஎல் ஆண்கள் அணி தவிர, டெல்லிக்கு மகளிர் அணியும், தென்னாப்பிரிக்க லீக்கில் ப்ரீடோரியா கேபிடல்ஸ் அணியும் உள்ளன. ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் நிர்வாகம் மாற்றப்படும். இந்த முறை ஐபிஎல் ஆண்கள் அணியின் பொறுப்பை ஜிஎம்ஆர் குழுமம் ஏற்றுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ குழுமம் 2027 இல் மீண்டும் பொறுப்பேற்கும். அதுவரை அவர்கள் மகளிர் அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் பொறுப்பை கவனிப்பார்கள்.

34
Delhi Capitals Retained Players

ரிஷப் பண்ட் டெல்லி அணியிலேயே தொடர்வார் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிர்வாக மாற்றத்தால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. டெல்லி அணியுடனான 8 வருட உறவு முறிந்து போகலாம். அவர் தானாகவே அணியில் இருந்து விலக விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நிர்வாகம் பண்டை டெல்லி அணியின் கேப்டனாக வைத்திருக்க விரும்பவில்லை. ஆனால் பண்ட் கேப்டனாகவே தொடர விரும்புகிறார். அவர் மெகா ஏலத்தில் பங்கேற்றால், சென்னை, லக்னோ, ஆர்சிபி போன்ற அணிகள் அவரை வாங்க போட்டி போடும்.

44
Delhi Capitals, IPL 2025 Auctions, Rishabh Pant Removed From Delhi Capitals

எனவே, பண்ட் குறித்து டெல்லி என்ன முடிவெடுக்கிறது என்பதை அனைவரும் உன்னிப்பாக கவனிப்பார்கள். குல்தீப் யாதவ் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் டெல்லி அணியில் தக்கப்படுத்தப்படலாம். இருவரும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குல்தீப் யாதவுக்கு 14 கோடி ரூபாயும், அக்ஷர் படேலுக்கு 18 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்படலாம். ரிஷப் பண்ட் நீக்கப்பட்டால் அக்‌ஷர் படேல் கேப்டனாக தொடர வாய்ப்புகள் இருக்கிறது. 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories