ஐபிஎல் 2026-ல் சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் போட்டியில், பேட் அளவு சோதனையில் அம்பயர் செய்த தவறால் குழப்பம் ஏற்பட்டது. பின்னர், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 73 ரன்கள் விளாசி அசத்தினார்.
சென்னையில் நடந்த சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் போட்டியில், 18 வயது சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே களமிறங்கியபோது, அம்பயர் அபிஜித் பட்டாச்சார்யா அவரது பேட்டை சோதனை செய்தார். ஐபிஎல் விதிமுறைப்படி இல்லாததால், மாத்ரே வேறு பேட்டை வரவழைத்தார். ஆனால், இரண்டாவது பேட்டும் சோதனையில் தோல்வியடைந்தது.
25
அம்பயர் செய்த அந்த பெரிய தவறு என்ன?
ஆயுஷ் மாத்ரேயின் பேட்டில் எந்த தவறும் இல்லை என அவர் வாதிட்டதால், அம்பயர் அபிஜித் பட்டாச்சார்யா மீண்டும் சோதித்தார். அப்போதுதான், தான் பேட் கேஜை தவறாகப் பிடித்திருந்ததை உணர்ந்தார். தன் தவறை சரிசெய்து, மாத்ரேயின் பேட் சரியானதே என உறுதிசெய்து, மன்னிப்பு கேட்டு ஆட்டத்தைத் தொடர அனுமதித்தார்.
35
பவுலர்களைப் பந்தாடிய 18 வயது புயல் மாத்ரே
இந்தக் குழப்பங்களால் கவனம் சிதறாத ஆயுஷ் மாத்ரே, வெறும் 29 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி அசத்தினார்.
மொத்தம் 43 பந்துகளில் 6 ஃபோர்கள், 5 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்த மாத்ரே, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுடன் 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 18 வயதில் ஐபிஎல்-ல் அதிக ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலில் மாத்ரே (94, 73) 2-வது, 3-வது இடங்களைப் பிடித்தார்.
55
CSK vs PBKS : இரு அணிகளின் விவரம்..
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக பிரசாந்த் வீர் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் மாற்றம் இல்லை. இரு அணிகளின் பிளேயிங் 11 விவரம் இதோ.