
தலைமுடி பராமரிப்பிற்கு அவ்வப்போது தலைக்கு குளிப்பது மிகவும் அவசியம். சில பெண்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிப்பதை வழக்கமாக்க வைத்துள்ளார்கள். இன்னும் சில பெண்களோ தினமும் கூட தலைக்கு குளிப்பார்கள். ஆனால், இன்றைய பிசியான வாழ்க்கை முறையில் காலையில் உங்களுக்கான நேரத்தை கடைப்பிடிப்பது ரொம்பவே கஷ்டம். இதனால் பல பெண்கள் பகலை விட இரவு நேரத்தில் தான் தலைக்கு குளிக்கிறார்கள். ஒரு சில பெண்கள்தான் பகலில் கலைக்கு குளிப்பார்கள்.
உண்மையில், வீட்டு வேலை மட்டுமின்றி, அலுவலகத்தில் நாள் முழுவதும் வேலை செய்வதன் காரணமாக சோர்வு ஏற்படும். இதன் காரணமாக தான் பெண்கள் பலர் இரவு நேரத்தில் தலைக்கு குளிக்க விரும்புகிறார்கள். ஆனால், ஜோதிட சாஸ்திரங்கள் படி இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பது நல்லதல்ல. சாஸ்திரத்தில் பெண்கள் இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் அதில் சொல்லப்பட்டுள்ளன. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: பெண்களே! தப்பி தவறி கூட இந்த நாளில் தலைக்கு குளிச்சிடாதீங்க; லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்..!!
லட்சுமி தேவி கோபப்படுவாள்:
ஜோதிட சாஸ்திரங்கள் படி பெண்கள் இரவு நேரத்தில் தலைக்கு குளித்தால் லட்சுமி தேவி கோபப்படுவாள். இது தவிர நீங்கள் நிதி சிக்கலையும் சந்திக்க நேரிடும் என்று நம்பப்படுகிறது. இரவு நேரத்தில் தலைக்கு குளித்தால் பெண்களுக்கு குடும்ப வழிவகுக்கும். பெண்கள் வீட்டில் லட்சுமி தேவியாக கருதப்படுவதால், அவர்கள் இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பது அது வீட்டிற்கு நல்லதல்ல என்று சாஸ்திரம் சொல்லுகின்றது.
இதையும் படிங்க: மாதவிடாய் காலத்தில் தலைக்கு குளிக்கக் கூடாது? சாஸ்திரங்கள் கூறுவது என்ன?
வீட்டில் செழிப்பு தாங்காது:
பெண்கள் வீட்டில் லட்சுமி தேவியாக கருதப்படுவதால் அவர்கள் இரவு நேரத்தில் தலைக்கு குளித்தால் வீட்டில் ஒருபோதும் செழிப்பு தாங்காது. சாஸ்திரங்கள் படி இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் திசை மாறும். இதனால் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். முக்கியமாக வீட்டில் வறுமைக்கு வழி வகுக்கும். இதன் காரணமாக தான் இரவு நேரத்தில் பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டாம் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றது.
இரவில் தலைக்கு குளிக்க கூடாது என்பதற்கான அறிவியல் காரணங்கள்:
- இரவு நேரத்தில் பெண்கள் தலைக்கு குளித்து அவர்கள் அப்படியே ஈரமான கூந்தலுடன் தூங்க செல்லும் போது முடி உடையும் அபாயம் அதிகரிக்கும் முக்கியமாக இரவில் நேரத்தில் தலைக்கு குளிப்பது முடி மற்றும் அதன் வேர்கள் இரண்டையும் பலவீனப்படுத்தும்.
- ஈரமான தலையுடன் தூங்கினால் முடி உதிர்வதற்கு வழிவகுக்கிறது. அதுபோல நான் தூங்கும் போது புரண்டு படுப்பதால் தலைமுடியில் சிக்கு விழுகிறது. இதனால் முடி உதிர்வு அதிகரிக்கும் மற்றும் முடி உடையும். இதனால்தான் ஈரத் தலையுடன் தூங்க கூடாது என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
- அதுமட்டுமின்றி ஈரமான தலைமுடியுடன் தூங்கினால் தலையில் பூஞ்சை வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் இதன் காரணமாக தலையில் அலர்ஜி, பொடுகு பிரச்சனை ஏற்படும. இது தவிர ஈர தலையுடன் தூங்கும் போது தலைவலி, சளி, இருமல், காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.
மேலே சொன்ன இந்த காரணங்களால் தான் இரவு நேரத்தில் தலைக்கு குளிப்பது நல்லதல்ல என்று சொல்லப்படுகின்றது.