தமிழ்நாட்டின் சில முக்கிய தலங்களில் இந்த அரிய வகை பச்சை குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது:
1.காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்: இங்குள்ள குபேரன் சன்னதியில், தனது துணைவியார் சித்ரலேகையுடன் தாமரையில் அமர்ந்திருக்கும் குபேரனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு பக்தர்களுக்கு பச்சை குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேரனுக்குச் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.
2.பச்சையம்மன் ஆலயங்கள்: தமிழகத்தில் பல பகுதிகளில் குலதெய்வமாக வழிபடப்படும் பச்சையம்மன் ஆலயங்களிலும் பச்சை குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
3.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் (ஈரோடு, இரட்டைசுற்றிப்பாளையம்): இங்கு தயாரிக்கப்படும் பச்சை குங்குமத்தில் மஞ்சள், கற்றாழை, வேம்பு, அரச இலை, துளசி போன்ற இயற்கை மூலிகைகள் சேர்க்கப்படுவதால், இது கூடுதல் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.