நினைத்த காரியம் நிறைவேற சனிக்கிழமை இந்த இடங்களில் விளக்கேற்றுங்கள்!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது விருப்பங்கள் நிறைவேற சனிக்கிழமை அன்று இந்த மூன்று இடங்களில் விளக்கேற்றினால், ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும்.

vastu tips for lighting a lamp on saturday in tamil mks

Vastu Tips For Lighting A Lamp On Saturday : இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை பின்பற்றுவார்கள். சொல்லப்போனால் வாஸ்து சாஸ்திரம் அவர்களது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும். எந்தவொரு வேலையும் தொடங்கும் முன்னும் வாஸ்து சாஸ்திரத்தில் விதிகளின்படி தான் செய்வார்கள். வாஸ்துபடி செய்தால் காரியங்கள் கை கூடும் என்பது நம்பிக்கை. ஒருவேளை வாஸ்துவை புறக்கணித்தால் விளைவு மோசமாக இருக்கும். 

vastu tips for lighting a lamp on saturday in tamil mks

வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் நினைத்த காரியங்கள் நடப்பதற்கான பரிகாரம். ஒவ்வொருவரும் தங்களது ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சில சமயங்களில் அவை நிறைவேறாமல் இருக்கும். இதனால் அவர்களால் வேலையை ஒழுங்காக செய்ய முடியாமல் முடங்கி போய் இருப்பார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி சனிக்கிழமை அன்று இந்த 3 இடங்களில் விளக்கேற்றினால், உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அது மட்டுமின்றி உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் காண்பீர்கள். அது என்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.


சனி கோவில்:

மத நம்பிக்கைகளின் படி, சனிக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நீங்கள் சனி பகவானின் கோயிலுக்கு சென்று விளக்கேற்ற வேண்டும். குறிப்பாக கடுகு எண்ணெயால் விளக்கு ஏற்றினால் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் சடே, சதியை குறைக்கும் தீய விளைவுகள் நேரிடாது.

வீட்டின் பிரதான நுழைவாயில்:

சனிக்கிழமை அன்று உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலின் இடது பக்கத்தில் ஒரு விளக்கை ஏற்ற வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றன. இப்படி நீங்கள் செய்வது மூலம் லட்சுமி தேவியின் ஆசிகள் உங்கள் மீது பொழியும். அதுமட்டுமில்லாமல் உங்களது வாழ்க்கையில் செல்வம் மற்றும் செழிப்பு நிரம்பும்.

இதையும் படிங்க:  வீட்டில் விளக்கேற்றும் முன் இந்த விஷயங்களை முதலில் தெரிஞ்சுக்கோங்க..!!

அனுமான் கோயில்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, சனிக்கிழமை என்று நீங்கள் அனுமான் கோயிலுக்கு சென்று விளக்கேற்ற வேண்டும். இப்படி நீங்கள் விளக்கேற்றும் போது அனுமான் மகிழ்ச்சி அடைந்து உங்களது எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற தொடங்குவார். மேலும் நிலுவையில் உள்ள உங்களது அனைத்து வேலைகளும் முடியும்.

இதையும் படிங்க:  வீட்டில் இந்த 1 விளக்கு ஏற்றினால் போதும்.. பிள்ளைகள் வாழ்க்கையில் நல்லா இருப்பாங்க..

அரசமரம்

வாஸ்துபடி சனிக்கிழமை அன்று அரச மரத்தடியில் விளக்கேற்றுவது புனிதமாக கருதப்படுகிறது. மத நம்பிக்கைகளின் படி, சனிக்கிழமை அன்று இந்த இடத்தில் விளக்கேற்றினால் உங்களது விருப்பங்கள் நிறைவேறும் மற்றும் மகிழ்ச்சி, செழிப்பை காண்பீர்கள்.

Latest Videos

vuukle one pixel image
click me!