valentines day: தனிமை வாட்டுதா.. மனம் கவர்ந்தவரை அடைய இதை செய்தால் போதும்..காதல் திருமணம் நடப்பது உறுதி!

Published : Feb 14, 2023, 02:39 PM IST

valentines day 2023: சிவப்பு ரோஜாவில் செய்யும் ஒரு பரிகாரம் காதல் திருமணத்தில் உள்ள தடைகளை நீக்கிவிடும். 

PREV
17
valentines day: தனிமை வாட்டுதா.. மனம் கவர்ந்தவரை அடைய இதை செய்தால் போதும்..காதல் திருமணம் நடப்பது உறுதி!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது சிவப்பு ரோஜா கொடுத்து அன்பை வெளிப்படுத்துவார்கள். உங்கள் காதலி மனம் கவர தங்கம் அல்லது வைர மோதிரத்தை கொடுக்க வேண்டியதில்லை. ஒரு சிவப்பு ரோஜாவால் அதை சாத்தியப்படுத்த முடியும். சில பரிகாரங்கள் காதலில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவைக்கின்றன. 

27

திங்கட்கிழமை அல்லது பிரதோஷ விரத நாளில் சிவபெருமானுக்கு சிவப்பு ரோஜாவை வைத்து வணங்க வேண்டும். இந்த பரிகாரம் திருமண தடைகளை நீக்கும் என நம்பப்படுகிறது. 

37

செவ்வாய்கிழமையன்று 11 ரோஜாக்களை ஆஞ்சநேயருக்கு வைத்து அர்ச்சனை செய்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். விரும்பியவரின் அன்பைப் பெற, செவ்வாய்கிழமை அன்று ரோஜா மலர்களுடன் அவரது பெயரை காகிதத்தில் எழுதி, அனுமனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த ரோஜாக்களை விரும்பிய நபரிடம் கொடுக்க வேண்டும். காகிதத்தை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும். 

47

பித்ரு தோஷம் திருமணத்திற்கு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தோஷம் இருப்பவர்கள் பெரியவர்களையோ பெண்களையோ அவமதிக்காதீர்கள். இறந்தவர்களின் புகைப்படத்தின் முன் ரோஜாவை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

57

விரும்பியவரின் அன்பைப் பெறுவதில் உள்ள தடைகள் நீங்க துர்கா தேவியிடம் பிரார்த்தனை செய்யுங்கள். துர்கா தேவியை வேண்டிக் கொண்டு ஒரு வாரத்திற்கு தினமும் ரோஜா பூவில் கற்பூரம் வைத்து மாலை நேரம் எரியுங்கள். தகுந்த வாழ்க்கைத் துணை விரைவில் கிடைக்கும்.

67

வசந்தத்தை உயிர்ப்பிக்கும் அடையாளம் ரோஜா. தினமும் வீட்டில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை வைத்து, அதில் நறுமணம் கமழும் ரோஜா இதழ்களைச் சேர்க்கவும். கணவன்-மனைவி உறவில் இனிமை கிடைக்கும். 

77

தனிமையில் நாள்களை கழிப்பவர்கள், அன்பான துணையைத் தேடுபவர்கள் சிவலிங்கத்திற்கு ரோஜாப் பூ அர்ச்சனை செய்ய வேண்டும். அந்த பூவை அன்பின் அடையாளமாக கண்ணில் ஒத்தி முத்தமிட வேண்டும் அல்லது ஒன்றாக வைத்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் உண்மையான அன்பைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.  

காதல் வாழ்க்கையில் மன அழுத்தம், டென்ஷன் இருந்தால் சிவப்பு துணியில் சந்தனம், சிவப்பு ரோஜா, குங்குமம் ஆகியவை கொண்டு கட்டிக்கொள்ளுங்கள். இதனை வீட்டின் பூஜை அறையில் வைக்கவும். இதில் ஒரு சிவப்பு ரோஜாவை உங்கள் துணையிடம் கொடுத்தால் சச்சரவுகள் நீங்கும். இது உறவுகளில் கசப்பை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

click me!

Recommended Stories