அகத்தியரின் ‘புனைச்சுருட்டு’ நூலில் பருத்தி, அகத்தி, பனை, நாவல், அத்தி, எருக்கு, வெள்ளெருக்கு, புளியமரம், கருவேலம், முருங்கை, கல்யாண முருங்கை, கள்ளி, கரு ஊமத்தை, வில்வம், இலவம், ருத்ராட்சம், உதிரவேங்கை ஆகிய 17 வகையான மரங்களை வீட்டில் வைக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. புளிய மரம் எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் தன்மை கொண்டது. எனவே, இதனை வீட்டில் வளர்க்கக் கூடாது. எதிர்மறை சக்திகளால் வீட்டில் துன்பமும், வறுமையும் பெருகும். எனவே வீடுகளில் புளிய மரத்தை நடுவதை தவிர்த்து விடுங்கள். புளியமரம் சுற்றி உள்ள பகுதிகளில் வீடுகளையும் வாங்க வேண்டாம்.