விநாயகருக்கு பிள்ளையார், கணபதி, ஆனைமுகன், கஜானனன், விக்னேஸ்வரன், ஏகதந்தன், சுமுகன், வக்ரதுண்டர், கபிலர், லம்போதரன், விக்னேசன் என்று பல பெயர்கள் உண்டு. மேலும், பராசக்திக்கு பிடித்த பிள்ளையாக இருப்பவர் தான் கணபதி. துர்கம் என்பதற்கு தாங்க முடியாத பொருள். அதன்படி, கணபதியை வழிபட நம்முடைய தீராத கஷ்டமும் தீரும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது.