Spiritual: செல்வத்தை அள்ளித்தரும் சீக்ரெட் மந்திரம்.! தினமும் ஜெபித்தால் வீட்டில் செல்வ வளம் கொழிக்கும்.!

Published : Sep 12, 2025, 02:59 PM IST

செல்வ வளம் பெற லட்சுமி குபேர மந்திரம் மற்றும் பதிகம் உதவும். பூர்வ புண்ணியம் மற்றும் கர்ம வினைகளின் பங்கு, தன யோகங்கள் பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது.

PREV
15
பண வரவை ஈர்க்கும் லட்சுமி குபேர மந்திரமும் பதிகமும்.!

வீட்டில் செல்வமும் பொருளும் எப்போதும் செழித்திருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். இதற்காக, தெய்வ அருளுடன் பண வரவை ஈர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்களையும் வழிபாடுகளையும் நம் முன்னோர்கள் மற்றும் மஹரிஷிகள் வழங்கியுள்ளனர். அவற்றில் மிக முக்கியமான ஒன்று லட்சுமி குபேர மந்திரம் ஆகும்.

25
தனம் தரும் யோகங்கள்.!

பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் 11 வகையான தன யோகங்களை விவரிக்கிறது. பாவார்த்த ரத்னாகரம், சங்கீதநிதி போன்ற நூல்களிலும் பல தன யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக, 2-ம் பாவ அதிபதி 11-ம் இடத்திலோ அல்லது 11-ம் பாவ அதிபதி 2-ம் இடத்திலோ அமைந்தால், அந்த நபர் குபேரனைப் போல செல்வ வளத்துடன் விளங்குவார் என பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் கூறுகிறது. இந்த யோகங்கள் அனைத்தும் ஒருவரின் பூர்வ புண்ணியத்தைப் பொறுத்து அமைகின்றன.

நம் பிறப்பு, பெற்றோர், கர்ம வினைகள் போன்றவற்றை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால், கலியுகத்தில் கர்ம வினைகளை நீக்கி, சகல நன்மைகளைப் பெறுவதற்காக மஹரிஷிகள் பல மந்திரங்களை ஞான திருஷ்டியால் கண்டறிந்து அருளியுள்ளனர். இதை பாகவதமும் வலியுறுத்துகிறது.

35
லட்சுமி குபேர மந்திரம்.!

லட்சுமி குபேர மந்திரம் செல்வத்தைப் பெறவும், பெற்ற செல்வம் நிலைத்திருக்கவும் உதவும் சக்தி வாய்ந்த மந்திரமாகும். இந்த மந்திரத்தின் விவரங்கள்:

ரிஷி: விஸ்ரவர்

சந்தஸ்: ப்ருஹதி

தேவதை: சிவமித்ர தனேச்வரர்

மந்திரம்

ஓம் ஹ்ரீம் யட்சாய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதிபதயே தனதான்யஸ் ஸ்ம்ரிதிம் மே தேஹி தாபய ஸ்வாஹா

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் ஐம் மஹாலக்ஷ்மை கமலதாரிண்யை சிம்ஹவாஹின்யை ஶ்ரீயை நம ஸ்வாஹா

ஜபம் செய்யும் முறை

இந்த மந்திரத்தை ஒரு தகுதியான குரு அல்லது வேதம் கற்ற சாஸ்திரிகள் மூலம் உபதேசம் பெற்று, அங்கநியாசம், கரநியாசம் மற்றும் பூர்வாங்க பூஜைகளை முறையாகச் செய்து, ஒரு சிவாலயத்தில் அல்லது வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து 1 லட்சம் முறை ஜபிக்க வேண்டும்.

ஜபத்திற்கு முன், குபேரனை இவ்வாறு தியானிக்கவும்:

“மனித வாகனம் உடையவரும், தங்க விமானத்தின் கீழ் அமர்ந்தவரும், கருடரத்னம் போல் ஒளி வீசுபவரும், நிதி நாயகரும், சிவபெருமானின் நண்பரும், உயரிய ரத்தினங்கள் பதித்த கிரீடம் அணிந்தவரும், தொந்தி உடையவரும், அபய மற்றும் வரத ஹஸ்தங்களுடன் அருள்பவருமான குபேரனை, லட்சுமி தேவியுடன் தியானிக்கிறேன்”

45
தாராளமாக தங்கம் கிடைக்கும்.!

மந்திரத்தை முறையாக ஜபிக்க முடியாதவர்கள், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய பின்வரும் பதிகத்தைப் பாராயணம் செய்யலாம். இது விருத்தாசலத்தில் இறைவனைப் பாடி பொற்காசுகள் பெறப்பட்ட பதிகத்தின் முதல் பாடலாகும்:

பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர் முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் அடியேனிட் டளங்கெடவே

55
தெய்வ அருளுடன் செல்வ வளம் பெறலாம்

லட்சுமி குபேர மந்திரமும் பதிகமும் செல்வத்தை ஈர்க்கவும், வாழ்வில் செழிப்பை உருவாக்கவும் உதவும். முறையான வழிபாடு மற்றும் பக்தியுடன் இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், தெய்வ அருளுடன் செல்வ வளம் பெறலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories