பங்குனி பிரதோஷ வழிபாடு
பிரதோஷ நேரத்தில் நடைபெறும் ஆலய பூஜையின் போது நந்தி தேவர், சிவன், பார்வதி தேவியை முழுமனதாக பிரார்த்தனை செய்யுங்கள். நவக்கிரக சந்நிதியில் வீற்றிருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, பீட்ரூட் சாதம் செய்து நைவேத்தியமாக வைத்து வணங்கலாம். வழிபாட்டிற்கு பின் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏதேனும் இனிப்பு வகைகள், பொங்கல், சுண்டல் போன்ற உங்களால் முடிந்தவற்றை வழங்கலாம்.