
கனவுகள்… மனிதனை விட்டு ஒரு நொடி கூட விலகாதவை. நாம் தூங்கும்போது மட்டுமல்ல, விழித்திருக்கும்போதும் நம்மை ஆட்டிப் படைப்பவை. ஆனால் இரவில் வரும் கனவுகளுக்கு ஒரு தனி மர்மமும், மரியாதையும் உண்டு. ஆயுர்வேதமும், ஜோதிடமும், பிரச்ன மார்க்கமும் இதை விரிவாகச் சொல்கின்றன.
இவை மூன்றும் தோஷத்தால் வரும் கனவுகளாதலால் பலன் மிகக் குறைவு.
திரிஷ்டம் – பார்த்ததை கனவில் காணுதல்
ஷ்ருதம் – கேட்டதை கனவில் காணுதல்
அனுபூதம் – தொட்டது, முகர்ந்தது, ருசித்தவற்றை காணுதல்
பிரார்த்திதம் – ஆசைப்பட்டவற்றை காணுதல்
கல்பிதம் – கற்பனையில் உருவானவை
பாவஜம் – மேற்கண்டவற்றில் எதிலும் சேராதவை
தோஷஜம் – திரிதோஷத்தால் வருபவை
இதில் முதல் ஐந்தும் மற்றும் பகல் கனவுகளும் பொதுவாகப் பலனளிப்பதில்லை. பகலில் தூங்குவதையே ஆயுர்வேதம் தடை செய்கிறது!
இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
முதல் யாமம் → 1 வருடத்துக்குள் பலிக்கும்
இரண்டாம் யாமம் → 8 மாதங்களுக்குள்
மூன்றாம் யாமம் → 3 மாதங்களுக்குள்
நான்காம் யாமம் (அதிகாலை) → 10 நாட்களுக்குள் அல்லது உடனடியாகவே
தெய்வங்கள், பசு, எருது, உயிருடன் இருக்கும் உறவினர்கள், அரசர், எரியும் நெருப்பு, தூய்மையான குளம், வெள்ளை ஆடை அணிந்த சிரிக்கும் குழந்தைகள், வெள்ளை மலர்கள், யானை, குதிரை, பல்லக்கு, கிழக்கு/வடக்கு திசைப் பயணம், எதிரிகளை வெல்லுதல், முன்னோர்கள் மகிழ்ந்த நிலை, ஆபத்தில் இருந்து தப்புதல், இவை எல்லாம் மிகவும் சுபம். சில சுவாரஸ்யமான சுப கனவுகள்:
அழுக்குத் தாமரை இலையில் பாயசம், நெய் சாப்பிடுவது போன்ற கனவு வந்தால் நீங்கள் பெரிய அறிஞர் ஆவீர்கள் . அத்போல் குயில் இனிய குரலில் கூவுவதும் நீங்கள் திடுக்கிட்டு விழித்தால் அழகும் இனிமையும் கொண்ட மனைவி கிடைப்பாள் . அதேபோல் நோயாளி சூரியன் மற்றும் சந்திரனை கனவி் கண்டால் அவர் விரைவில் குணம் அடைவார்.
உடனே எழுந்து கை-கால் கழுவி, திருநீறு பூசி, இறைநாமத்தை 12 முறை சொல்லி வணங்கவும். தானம், ஜெபம், தியானம், யாகம் போன்றவற்றால் கெடு பலனைத் தவிர்க்கலாம்.
நல்ல கனவு வந்தால் உடனே எழுந்து குளித்து இறைவனை வணங்கி, அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது மிகவும் சிறந்தது என்று பெரியோர் சொல்கிறார்கள்.
கனவு என்பது வெறும் தூக்கத்தின் விளையாட்டு மட்டுமல்ல… நம் உடல், மனம், கிரக நிலை, முற்பிறவி என எல்லாமே அதில் பிரதிபலிக்கின்றன. அதனால் தான் “கனவு கண்டுவிட்டு மறுபடியும் தூங்காதே… உடனே எழுந்து இறைவனை நினை!” என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள்.
கனவு என்பது நமது ஆழ்மனதின் அழகிய கண்ணாடி மட்டுமல்ல… அது நமக்கான இறைவனின் மென்மையான வழிகாட்டியும் கூட. ஒவ்வொரு காலையிலும் எழுந்தவுடன் நன்றியோடு சிரியுங்கள் .இன்னொரு கனவு எனக்காகக் காத்திருக்கிறது என்று. நல்ல கனவை நினைத்து நாள் முழுக்க நம்பிக்கையோடு செயல்படுங்கள். கெட்ட கனவு வந்தாலும், “இது என்னை இன்னும் வலிமையாக்க வந்திருக்கிறது” என்று எழுந்து நிற்குங்கள்.