நவராத்திரி பண்டிகையின் கொண்டாடுவது ஏன்?
நவராத்திரி என்பது இந்து மதத்தினரின் முக்கியமான விரல் மற்றும் பண்டிகைகளில் ஒன்றாகும். மேலும் பெண்மையையும், பெண் தெய்வத்தின் சக்தியையும், அவளது பல்வேறு வடிவங்களையும் போற்றி வழிபடும் நாளாகும். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால், நம்முள் இருக்கும் பகை, எதிர்மறை ஆற்றல்கள் மோசமான எண்ணங்கள் போன்றவற்றை அளித்து, நம்முடைய வாழ்க்கையை செழிப்பாக மாற்றி நம்மை வாழ வைப்பாள் என்பது நம்பிக்கை.
நவராத்திரி சிறப்புகள் :
கொலு வைப்பது நவராத்திரியின் சிறப்பு அம்சமாகும். கொலு என்பது துர்க்கையின் பல்வேறு வடிவங்களை பொம்மைகளாக செய்து, நேர்த்தியாக அலங்கரித்து மேடையில் வைத்து, அவற்றை அம்பாளாக நினைத்து அவற்றிற்கு பூஜை மற்றும் சகல வழிபாட்டு முறைகளையும் செய்து வழிபடுவார்கள். வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் அவற்றின் முன் நவகிரக கோலம் போட்டாள், அம்பாளின் அருள் மற்றும் நவகிரக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.