இன்று மாசி மாத சஷ்டி: இரவுக்குள் இந்த ஒரு மந்திரத்தை, முருகனை நினைத்து உச்சரித்தால் 16 வகை செல்வம் கிடைக்கும்

Published : Feb 25, 2023, 04:48 PM ISTUpdated : Feb 25, 2023, 05:00 PM IST

shasti viratham: மாசி மாத வளர்பிறையில் முருகபெருமானுக்கு சஷ்டி விரதம் இருப்பதன் பலன்களை இங்கு காணலாம். 

PREV
15
இன்று மாசி மாத சஷ்டி: இரவுக்குள் இந்த ஒரு மந்திரத்தை, முருகனை நினைத்து உச்சரித்தால் 16 வகை செல்வம் கிடைக்கும்

முருகப்பெருமான் பக்தர்களை அரவணைப்பதில் ஜனநாயகம் கொண்டவர். அவருக்குரிய கந்தசஷ்டி கவசத்தை விடாமல் தொடர்ச்சியாக 48 நாட்கள் பாராயணம் செய்து வருவீர்கள் என்றால் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம். உங்களுடைய பாவங்கள் தீரும், தீராமல் இழுபறியாக இருக்கும் வினைகள் முடிந்து எல்லா சௌபாக்கியமும் கிடைக்கும். 

25

முருக புராணம்

நம் முன்னோர், வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை என சொல்லி, அதை நம்பி வழிப்பட்டும் வந்தவர்கள். இவை வெற்று வார்த்தைகள் இல்லை. இதனுள் பல அர்த்தங்களும் அனுபவமும் பெரிது. பக்தர்கள் கேட்கும் வரங்களை வாரி கொடுக்கும் கருணை ஊற்றாகவும், வேலை நம்பிக்கையோடு தொழுபவர்களுக்கு செய்த வினைகளை போக்கும் இறைவனாகவும் இருப்பவர் முருகபெருமான். இவரே கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யும் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் தெய்வம். 

35

சஷ்டி விரதம்..  

முருகபெருமானுக்குரிய விரதங்களிலே குறிப்பிடத்தகுந்தது சஷ்டி விரதம். இந்த விரதம் இருந்து வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும் என சுருக்கமாக பக்தர்கள் நினைக்கிறார்கள், ஆனால் சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும்; வேலை கிடைக்கும்; கடன் தொல்லை அகன்று வறுமை ஒழியும். வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளையும் நீக்க சஷ்டி விரதம் துணை செய்யும். 

எப்படி ஜெபிக்க வேண்டும்? 

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகியவை முறையே இரண்டு தடவை சஷ்டி திதி வரும். அப்போது முருகனை வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் உங்களைத்தேடி வரும். சஷ்டி திதி வரும்போது காலை, மாலை இரண்டு நேரங்களிலும் வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன்பு உட்காந்து, முருகனை மட்டும் மனதில் நினைந்து கந்த குரு கவசம், திருப்புகழ் பதிகம், கந்தசஷ்டி கவசம் ஆகியவற்றை முழுவதும் அல்லது ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்யுங்கள். 

45

குறிப்பாக உங்கள் மனதில் என்ன வேண்டுதல் இருக்கிறதோ அதற்கேற்ற திருப்புகழ் பதிகத்தை முருகனை நோக்கி பாராயணம் செய்து வழிபட வேண்டும். அப்படி செய்தால் உங்கள் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும். வழிபாட்டில் செவ்வரளி பூக்களை முருகனுக்கு சூடி, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சோறு போன்றவை முருகனுக்கு படைக்கலாம். அதை செய்ய இயலாவிட்டால் பால், பழம் ஆகியவை மட்டும் முருகனுக்கு படைத்து வழிபாட்டை தொடரலாம்.  

மாசி மாதம் சிறப்பானது..

பிற மாதங்களை விடவும் மாசியில் வரும் வளர்பிறை சஷ்டி ரொம்ப சிறப்பு கொண்டது. அப்போது பெரும்பாலானோர் விரதமிருக்கின்றனர். இந்த தினத்தில் விரதம் இருப்பவர்களின் வேண்டுதல் கூடுதல் பலன் பெறும். உங்களுக்கு எதிரான பகை நீங்கும், எதிர்ப்புக்கள் கூட குறையும். மாசி மாதம் சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு முருகனை அருளால் 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

இதையும் படிங்க: குண்டுமணி தங்கம் கூட இல்லாம வருத்தமா.. இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்தால்..கணக்கு தெரியாத அளவிற்கு நகை சேரும்

55

முருகனின் அருளை பெற.. 

முருகபெருமானின் பூரண அருள் கிடைப்பதற்கு அருணகிரிநாதர் கொடுத்த திருப்புகழ் மந்திரத்தை சொல்ல வேண்டும். அந்த பதிகத்தில் இருக்கும் 904 வது பதிகத்தை உச்சரிக்கலாம். அதை படிக்கும்போது உங்களுடைய மனம் மொத்தமாக முருகனை சரணடைந்து அவரின் பால் ஈடுபாடு கொள்ளும். அதனால் முருகப்பெருமானின் அருள் முழுவதும் கிடைக்கும். 

எல்லோருக்கும் கந்தசஷ்டி கவசம் தெரிவதில்லை. அவர்கள் 'சரவண பவ' என்னும் மந்திரம் மட்டும் தங்கள் வாயால் உச்சரிப்பு செய்தால் நன்மைகள் பெருகும். மாசி மாத சஷ்டி விரத நாளான இன்று, முருகபெருமானின் புகழை சொல்லும், 'சரவண பவ' எனும் மந்திரத்தை உச்சரிக்கலாம். அதில் இருக்கும் எல்லா எழுத்தும் ஆற்றல் படைத்தது, அதை நம்பி சொன்னால் நலன்கள் பெருகும். இன்று இரவுக்குள் முருகபெருமான் முன்பு அமர்ந்து வேண்டிக் கொள்ளுங்கள். மாலை வேளை உகந்தது. 

இதையும் படிங்க: உங்கள் கண் துடித்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன?

click me!

Recommended Stories