சஷ்டி விரதம்..
முருகபெருமானுக்குரிய விரதங்களிலே குறிப்பிடத்தகுந்தது சஷ்டி விரதம். இந்த விரதம் இருந்து வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும் என சுருக்கமாக பக்தர்கள் நினைக்கிறார்கள், ஆனால் சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கும்; வேலை கிடைக்கும்; கடன் தொல்லை அகன்று வறுமை ஒழியும். வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளையும் நீக்க சஷ்டி விரதம் துணை செய்யும்.
எப்படி ஜெபிக்க வேண்டும்?
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகியவை முறையே இரண்டு தடவை சஷ்டி திதி வரும். அப்போது முருகனை வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் உங்களைத்தேடி வரும். சஷ்டி திதி வரும்போது காலை, மாலை இரண்டு நேரங்களிலும் வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன்பு உட்காந்து, முருகனை மட்டும் மனதில் நினைந்து கந்த குரு கவசம், திருப்புகழ் பதிகம், கந்தசஷ்டி கவசம் ஆகியவற்றை முழுவதும் அல்லது ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்யுங்கள்.