நம்முடைய பாவம் நீக்கியருளும் சனி பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அதனால் பல நன்மைகள் கிடைக்கும். சிவபெருமானுக்கு பிறகு நந்திதேவருக்கும் பூஜைகள் நடைபெறும். இன்று சனி பிரதோஷம். சிவராத்தி தினத்தன்று வந்ததால் கூடுதல் சிறப்பு. இன்றைக்கு நடைபெறும் அபிஷேகத்தை தரிசித்தால், பாவமெல்லாம் கரையும் என ஆன்மீகம் அறிந்த பெரியோர் சொல்கின்றனர். மாசி மாதத்தில் வரும் இந்த சனி பிரதோஷம் விசேஷமானது. இன்று திருவோணம், சிவராத்திரி ஆகியவை கொண்டாடப்படுவது முக்கிய காரணம்.