நடைபாதை வழியாக செல்லும் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் அறைகள் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தானம் தரப்பில் செய்து தரப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இந்த இரு மலைபாதைகளிலும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோருடன் அலிபிரி நடைபாதையில் சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி சென்று கடித்துக் கொன்ற சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.