வீட்டு பூஜைகளின்போது எப்போதும் தண்ணீர் பயன்படுத்துவார்கள். தீர்த்தம் இல்லாத பூஜைகளே கிடையாது. அது ஏன் என்று யோசனை செய்திருக்கிறீர்களா? ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீட்டு பூஜை அறையில் செம்பு அல்லது பிற உலோக பாத்திரத்தில் தண்ணீர் வைப்பார்கள். இந்த தண்ணீரை அடிக்கடி மாற்றி வைக்க வேண்டும். அப்போது வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிப்பார்கள். இப்படி பூஜையில் பயன்படுத்திய நீரை வீட்டில் தெளித்தால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை இந்த பூஜை தண்ணீர் உறிஞ்சுகிறது.