வெள்ளிக்கிழமை வழிபாடு:
வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை வழிபட்டு வர எல்லா வளமும், நலமும் உண்டாகும். திருமண யோகம் கிடைக்க, சுக்கிர பகவானை வழிபட வேண்டும். குழந்தை பாக்கியம், கடன் தொல்லை நீங்க, வீடு, மனை, சொத்துக்கள் போன்ற சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சம்பத்துக்களையும் பெறுவதற்கு சுக்கிர வழிபாடு செய்து வருவது நல்லது.
சனிக்கிழமை:
சனி நாளில் சனி பகவான் வழிபாடு செய்துவர ஆயுள் பலம் பெருகும். நீண்ட ஆயுளுக்கு சனிக்கிழமையில் சனிபகவான் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். அடுத்து, நாம் செய்யும் பாவத்திற்கு ஏற்ப தண்டனையையும், புண்ணியத்திற்கு ஏற்ப அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக்கூடிய சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது நலம் தரும்.