உங்கள் வீட்டில் லட்சுமி தங்க; வெள்ளியன்று ஒருபோதும் கடன் வாங்கவோ கொடுக்கவோ வேண்டாம்..!!

First Published Jul 14, 2023, 11:33 AM IST

லட்சுமி தேவியை கோபப்படுத்தும் தவறுகள் என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அவள் கோபப்பட்டால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு பதிலாக, வறுமை வர ஆரம்பிக்கும்.

ஜோதிட சாஸ்திரப்படி வெள்ளியன்று கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? செல்வத்தின் கடவுளான லட்மியின் இந்த நாளில் நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தினால், உங்கள் வீட்டிற்கு ஒருபோதும் வறுமை வராது. எனவே வெள்ளியன்று என்ன பொருட்களை தானம் செய்யக் கூடாது மற்றும் என்னென்ன விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

சர்க்கரை தானம் செய்யக்கூடாது:
சுக்கிரனின் தாக்கத்தால் வாழ்வில் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும். ஆகையால் வெள்ளிக்கிழமையில் சர்க்கரை தானம் செய்யாதீர்கள். ஒருவேளை நீங்கள் சர்க்கரையை தானம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சி குறையும். கிரகநிலைப்படி தர்மம் செய்தால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. குறிப்பாக நீங்கள் வியாபாரம் செய்தால் வெள்ளிக்கிழமை சர்க்கரை தானம் செய்வதைத் தவிர்க்கவும். இந்த நாளில் சர்க்கரையைத் தவிர, வேறு எந்த வெள்ளைப் பொருளையும் தானம் செய்யக்கூடாது. 

வீட்டை அழுக்காக விடாதீர்கள்:
லட்சுமியின் இந்த நாளில், நீங்கள் காலையிலும் மாலையிலும் வீட்டில் வழிபட வேண்டும். லட்சுமி சுத்தமான வீட்டில் தான் வசிக்கிறாள். வீட்டை அசுத்தமாக வைத்திருந்தால் அது வறுமையைத் தரும். 

மாமிசம் சாப்பிடக் கூடாது:
வெள்ளிக்கிழமைகளில் தவறுதலாக கூட இறைச்சி மற்றும் மது அருந்தக்கூடாது. இந்த நாளில் மாமிசம் தவிர கீரை, பருப்பு போன்ற காய்கறிகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் லட்சுமி தேவியின் அருள் பெறுவீர்கள். 

கெட்ட வார்த்தை பேசாதே:
இந்நாளில் உங்கள் வாயிலிருந்து எந்தவொரு கெட்ட வார்த்தையும் வரக் கூடாது. மேலும் வாயின் வார்த்தைகள் நிதானமாக இருக்கவும். லட்சுமி தேவி கெட்ட வாய் பேசுபவர்களிடம் கோபப்படுகிறாள். அவளுடைய ஆசீர்வாதத்தை உங்களால் ஒருபோதும் பெற முடியாது. 

இதையும் படிங்க: கடனில் மூழ்கி இருக்கிறீர்களா? என்ன செய்வதென்று தெரியவில்லையா? இந்த 5 வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்..!!

கடன் கேடு:
வெள்ளிக் கிழமை கொடுத்த கடன் கேடு என்று கூறப்படுகிறது. லட்சுமி தினத்தன்று யாருக்காவது கடன் கொடுத்தால், உங்கள் லட்சுமியை வேறொருவரின் வீட்டிற்கு அனுப்புகிறீர்கள், நீங்கள் கடன் வாங்குகிறீர்கள் என்றால், உங்கள் வீட்டிலிருந்து அடுத்தவர் வீட்டிற்கு லட்சுமி செல்கிறது என்று அர்த்தம். இதனால் லட்சுமி ஒருபோதும் மகிழ்ச்சியடையவில்லை. நீங்கள் மகிழ்ச்சியடைய மாட்டீர்கள். எனவே வெள்ளி அன்று இந்த காரியத்தை ஒருபோது செய்யாதீர்கள். வெள்ளிக்கிழமை இந்த விஷயங்களை தவிர்த்தால் மன அழுத்தம் உங்கள் வாழ்க்கையில் இருந்து அகலும் மற்றும் உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

click me!