குலம் காக்கும் குலதெய்வம் யார் என்று தெரியாமல் கவலையா? இந்த 1 காரியம் செய்தால் உங்க குலதெய்வம் மனதில் தோன்றும்

First Published May 25, 2023, 11:45 AM IST

clan deity worship: குலம் காக்கும் குலதெய்வம் யாரென தெரியாதவர்கள் எப்படி வழிபாடு செய்தால் குலதெய்வ அருள் கிடைக்கும் என்பதை இந்த ஆன்மீக பதிவில் காணலாம். 

நமது வம்சத்தை காத்தருளும் தெய்வத்தையே குலதெய்வம் என கும்பிடுவோம். நமது மூதாதையர் ஆகிய இவர்கள் நம் சந்ததியை வாழையடிவாழையாக பராமரித்து வருகின்றனர். நம்மை வழி நடத்துவது குலதெய்வங்கள் தான். அனைத்து தெய்வங்களை விடவும் குலதெய்வம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமானவர்.  சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் யார் என்று தெரியாது... அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

பரிகாரம் 

இந்த பரிகாரத்தை 5 வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.  ஆறாவது வெள்ளிக்கிழமையில் உங்களின் குலதெய்வம் யார் என்பது உங்களுக்கு தானாகவே தெரிய வரும். குலதெய்வத்தின் அருளும், ஆசியும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். இந்த பரிகாரத்தை செய்ய நொச்சி மரத்தை நாட வேண்டும். இந்த மரத்திற்கு குலதெய்வத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. 

நொச்சி இலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன.  தலைவலிக்கு ஆவி பிடிக்கும் போது நொச்சி இலையை பயன்படுத்தலாம், தைலம் தயாரிப்பதிலும் இது பயன்படுகிறது. ஆன்மீகத்தைப் பொறுத்தவரை நொச்சி இலைகள் தெய்வ அம்சம் பொருந்தியவை. 

நொச்சி மரத்தை குலதெய்வமாக கருதி, மஞ்சள் குங்குமம் பூசி குலதெய்வத்தை ஆவாகனம் செய்ய வேண்டும். மண்பானை அல்லது பித்தளைச் செம்பில் தண்ணீர் நிரப்பி வையுங்கள். இதன் அருகே முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து,  அவற்றிற்கும் மஞ்சள், குங்குமம் இட்டு கொஞ்சம் பூக்களை சாற்றி விடுங்கள். குலதெய்வத்திற்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைக்கலாம். வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக தயார் செய்து மண் தட்டு அல்லது இலையில் படையுங்கள். பின்னர் தீப, தூப ஆராதனை செய்து குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். குலதெய்வம் யாரென்று தெரியாத காரணத்தால் குழம்பி போகவேண்டாம்.. "மனதினுள் குலதெய்வமாகிய உம்மை மன்றாடுகிறோம். உம்மையே நினைத்து வழிபடுகிறோம். இன்னல் எல்லாவற்றிலும் பாதுகாத்து வழிநடத்து" என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 

குலதெய்வத்துக்கு மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. பிற விளக்குகளை காட்டிலும் மண் விளக்கே குலதெய்வத்திற்கு ஏற்றது.  ஏனென்றால் மண்ணால் தயாரிக்கப்பட்ட விளக்குகள் மீண்டும் மண்ணுக்கு திரும்பி விடும். இப்படிப்பட்ட அகல் விளக்கு குலதெய்வத்திற்கு உகந்தது என சொல்லப்படுகிறது.  

குலதெய்வ வழிபாடு 

இரண்டு மண் அகல் விளக்குகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்யுங்கள். மஞ்சள், குங்குமம் ஆகியவை பூசி நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி வைத்து தீபம் ஏற்றுங்கள்.  இப்படி செய்வது மிகவும் நல்லது. உங்களுடைய குலதெய்வம் யார்? என்று தெரிந்து கொள்ளாமல் இருப்பது ரொம்பவும் தவறாகும். இப்படி தொடர்ச்சியாக 5 வாரங்கள் நொச்சி மரத்தை குலதெய்வமாக மனதார நினைத்து வழிபட்டால்  ஆறாவது வாரத்தில் குலதெய்வ அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்கும். வீட்டில் தடைபட்ட நல்லது எல்லாமே நடக்கும். 

clan deity worship: வெள்ளிக்கிழமையில் உங்களுடைய வீட்டு பூஜையறையில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இந்த விஷயத்தை செய்ய வேண்டும். அதிகாலை எழுந்து குளித்த பின்னர் 5 முக குத்து விளக்கு ஏற்றி அதனுடைய தண்டு பாகத்தில் ஒரு புதிய துணியை சாற்றுங்கள். அதற்கு பூக்கள் சுற்றி தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு ஆகியவை வைத்து பொங்கல் நைவேத்தியம் படையுங்கள். பின்னர் தீப தூப ஆராதனை காட்டி "எங்களுடைய குலதெய்வம் தெரியாமல் மனம் வருந்தி கொண்டிருக்கிறோம். எங்களுடைய குலதெய்வத்தை நினைத்து உங்களை அவராகவே பாவித்து இந்த படையலை படைத்துள்ளோம். இதை ஏற்று விரைவில் எங்கள் குலெதெய்வத்தை குறித்த விவரங்களை காட்டுங்கள்"என வேண்டி கொள்ளுங்கள். இறை அருளால் உங்களுடைய குலதெய்வம் தெரியவரும். 

click me!