குருப்பெயர்ச்சி பலன்! - சிம்மம், துலாம், தனுசு ராசி நேயர்களே கவனமாக இருங்கள்!

First Published Nov 24, 2022, 5:30 PM IST

குரு பகவான் இன்று முதல் ஏப்ரல் மாதம் இறுதி வரை மீன ராசியில் நேர்கதியில் பயணம் செய்யவிருக்கிறார். இதனால் சிம்மம், துலாம் மற்றும் தனுசு ராசி நேயர்களே மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

guru

குரு பார்வை கோடி நன்மை என்பார்கள், குரு பகவான் கடந்த ஏழு மாதங்களாக மீன ராசியில் பயணம் செய்கிறார். கடந்த நான்கு மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்த குரு பகவான் இன்று முதல் ஏப்ரல் மாதம் இறுதி வரை மீன ராசியில் நேர்கதியில் பயணம் செய்யவிருக்கிறார். இதனால் சிம்மம், துலாம் மற்றும் தனுசு ராசி நேயர்களே மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

குரு பெயர்ச்சி 2022 பலன்: சாஸ்திர ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதம் அதிக ஏற்ற இறக்கம் கொண்டிருக்கும். நவ.24ம் தேதி அதிகாலை 4.36 மணிக்கு குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தார். இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பல வித தாக்கத்தை ஏற்படுத்தும்.
 

குரு பார்வை கோடி நன்மை என்பார்கள். ஆனால், இந்த குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அசுபமானது. குருவின் இந்த இட பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்காது. சில ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை மோசமான விளைவையும் ஏற்படுத்தும்.
 

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே! வாழ்க்கையில் எழுச்சி இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளலாம், தேவையில்லாமல் அன்னியர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். வேலை தேடும் மற்றும் போட்டித் தேர்வு எழுதத் தயாராகும் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
 

துலாம்

துலா ராசி நேயர்களே: சமூகத்தில் மரியாதை உயரும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிரிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்திடுங்கள். பணப்பரிவர்த்தனையில் கவனம் அவசியம்.
 

தனுசு

தனுசு ராசி நேயர்களே: இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பாதகமான பலன்களை தரும். உடல்நலம் பாதிக்கப்படும். விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகலாம், எனவே வாகனம் ஓட்டும்போது அதிக கவனம் தேவை. தேவையற்ற மன அழுத்தம் ஏற்படும்.
 

click me!