வாழைப்பழம், கொய்யா, மாதுளை, ஆப்பிள் போன்ற பழங்களை நைவேத்தியமாக வைக்கலாம். குறிப்பிட்ட ஒரு பழம் மட்டுமே கட்டாயம் என்றில்லை; பக்தியுடன் சுத்தமாக சமர்ப்பிப்பதே முக்கியம்.
அவல், பொரி மற்றும் இனிப்புகள்
சில பகுதிகளில் அவல், பொரி, சர்க்கரை அல்லது வெல்லம், இனிப்பு வகைகள் போன்றவற்றையும் விநாயகருக்கு படைக்கும் வழக்கம் உள்ளது.
இதுமட்டுமின்றி, மஞ்சள், குங்குமம், சந்தனம், தீபம், தூபம், கற்பூரம், பூக்கள் போன்ற பூஜைப் பொருட்களையும் வைத்துக்கொள்ள வேண்டும்.மேலும், விநாயகருக்கு உரிய 21 வகையான இலைகளைக் கொண்டு 'ஏகவிம்சதி பத்ர பூஜை' வழிபாடும் சில இடங்களில் சிறப்பாகக் கடைப்பிடிப்பதும் வழக்கம்.
நாம் முழு மனதோடும், தூய்மையான பக்தியோடும் செய்யும் எளிய வழிபாட்டைக் கூட விநாயகப் பெருமான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார். அனைவரும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.