நம் வீட்டில் பயன்படுத்தும் மிளகு 5 உள்ளங்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியே வீட்டு வாசலுக்கு நேரடியாக சென்று, கிழக்கு நோக்கியபடி நின்று, உங்கள் தலையை 7 முறை இடமிருந்து வலம், வலமிருந்து இடமாக சுற்றுங்கள். பின்னர் மேலும், கீழும் அப்படியே 7 முறை ஏற்றி இறக்குங்கள். இதை செய்தபிறகு உங்கள் கையில் வைத்திருக்கும் 5 மிளகில் 4 மிளகுகளை 4 திசைக்கும் தூக்கி எறிய வேண்டும். மீதம் கையில் உள்ள 1 மிளகை வானத்தை பார்த்து அதாவது மேலே தூக்கி வீசுங்கள். இந்த மிளகை எவ்வளவு தூரமாக தூக்கி வீசுகிறீர்களோ அவ்வளவு தொலைவில் உங்களுடைய கண் திருஷ்டி விலகி ஓடும். பரிகாரத்தை செய்யும் போது குலதெய்வத்தை நினைத்து கொள்ளுங்கள். குலம் காக்கும் தெய்வங்கள் எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும்.