கோடி கோடியாக செல்வம் அள்ளி தரும் வளர்பிறை சதுர்த்தி இன்று..இன்று மாலைக்குள் இந்த 1 விஷயத்தை தவறாம பண்ணுங்க!!

Published : Jun 22, 2023, 10:07 AM IST

வினை தீர்க்கும் வளர்பிறை சதுர்த்தி இன்று. எப்படி வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்தால் அவருடைய அருளை பெறலாம் என்று இங்கு காணலாம். 

PREV
14
கோடி கோடியாக செல்வம் அள்ளி தரும் வளர்பிறை சதுர்த்தி இன்று..இன்று மாலைக்குள் இந்த 1 விஷயத்தை தவறாம பண்ணுங்க!!

வினையெல்லாம் தீர்த்து நமக்கு நன்மைகளை செய்யும் கடவுள், விநாயகர். அவரை வழிபாடு செய்ய ஏற்ற நாளாக ஒவ்வொரு மாதம் சதுர்த்தியை சொல்வார்கள். சதுர்த்தி நாளில் விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த நாளில் விநாயகரை மனதார வழிபாடு செய்வோருக்கு எல்லா வளங்களும் கிடைக்கும். ஜூன் மாதம் 22ஆம் தேதியான இன்று வளர்பிறை சதூர்த்தியாகும். இன்று எப்படி வழிபட்டால் நம் வீட்டை கோடான கோடி செல்வம் தேடி வரும் என்பதை குறித்த தகவல்களை இங்கு காணலாம். 

24

இன்றைய நாளில் கருப்பு கொண்டைக் கடலை வேகவைத்து பிரசாதமாக செய்து கொள்ளுங்கள். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அவருக்கு குங்குமம் வைத்து அவர் முன் தூய்மையான மனதோடு அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபடும்போது மறக்காமல், ‘ஓம்! கம்! கணபதே நம’ எனும் மந்திரத்தை 106 முறை சொல்லுங்கள். 

34

வளர்பிறை சதுர்த்தியில் இப்படி வழிபாடு செய்தால் விநாயகர் நம்மிடம் வருவார் என்பது நம்பிக்கை. மேலும் 'ஓம் கெங்கெங் கணபதி, கெளரி புத்ராயா வங்வங் வருகவே' என்ற விநாயகர் மந்திரம் சொல்லி மனதார வேண்டிக்கொண்டு 106 முறை உச்சரித்தால் விநாயகப்பெருமானை சக்தி அழைத்து வருவார் என்பது ஐதீகம். 

44

இந்த வழிபாட்டை இன்று மாலை நேரம் 5 மணி முதல் இரவு 7 மணிக்குள் வீட்டில் செய்யலாம். இதை செய்வதால் வெற்றி, சக்தி, ஆனந்தம், செல்வம் போன்றவை கிடைக்கும். ஞானம் தேடி அலைபவர்கள் சதுர்த்தி தினத்தில் ஒளவையார் அகவல் என்னும் விநாயகர் அகவலை படியுங்கள். இதனால் உங்களுக்கு ஞானம் பிறக்கும். வினைகள் தீரும். எல்லாவித செல்வங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். 

click me!

Recommended Stories