
பொதுவாக புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் புரட்டி எடுப்பார்கள் என்று நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அது தவறு. உங்களுக்கு தெரியுமா.. உண்மையில், புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்பவே புத்திசாலிகளாக இருப்பார்களாம். அவர்கள் செய்யும் சிறிய முயற்சியில் கூட பல காரியங்களை சாதிப்பார்களாம்.
இப்படி புரட்டாசியில் பிறந்தவர்கள் சாதிக்கப் பிறந்தவர்களாக இருந்தாலும் கூட இம்மாதத்தில் குழந்தை பிறப்பதை பலரும் விரும்புவதில்லையே. அது ஏன் என்று நீங்கள் யோசிக்களாம்? இதற்கான முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
புரட்டாசி மாதம் மழைக்காலத்தின் ஆரம்பம். இதனால் பச்சிள குழந்தைகளுக்கு நோய்கள் தாக்கும் என்ற ஒரே காரணத்திற்காக தான் புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறப்பதை நம்மில் பலரும் விரும்புவதில்லை. ஆனால், அறிவு வித்தை கணிதம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான புதனின் வீடான கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் புரட்டாசியாகும். மேலும் இம்மாதத்தில் பிறந்தவர்கள் மிக எளிதில் பல விஷயங்களை கற்றுக் கொள்வார்களாம் தெரியுமா?
புரட்டாசி மாதத்தின் சிறப்பு:
புரட்டாசி தமிழ் மாதத்தில் ஆறாவது மாதம் ஆகும். முக்கியமாக புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் ஆகும். மேலும், இம்மாதத்தில் முக்கிய விரதங்கள், பண்டிகைகள் வருகின்றது. குறிப்பாக, முன்னோர்களை வழிபடும் மகாளய பட்சம், மகாளய அம்மாவாசை விரதம் போன்றவை இம்மாதத்தில் தான் வருகிறது. இப்படி பல விரதங்கள் பண்டிகைகள் நிறைந்த இம்மாதத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஆன்மீக குணம் நிறைந்தவர்களாக இருப்பார்களாம். இவர்கள் இடம், பொருள், நேரம் பார்த்து பேசுபவர்களாகவும், பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவர்களாகவும் இருப்பார்களாம்.
புரட்டாசியில் பிறந்தவர்களின் குண நலன்கள் :
புரட்டாசியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும், அவர்களது குண நலன்கள் என்ன என்றும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், அவர்கள் மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வார்களாம். குறிப்பாக பிறரது மனம் புண்படாத வகையில் நடந்து கொள்வார்களாம். அதே சமய சுயகவுரவம் ரொம்பபே பார்ப்பார்களாம்.
இவர்கள் பிறருக்கு வாக்கு கொடுத்தால் அதை கண்டிப்பாக காப்பாற்றுவார்களாம். குடும்பத்தாருடன் அனுசரித்துப் போவார்களாம். எதையும் வெளிப்படையாக பேசுபவர்களாம். ஒருபோதும் புறம் பேச மாட்டார்களாம். எந்த முடிவு எடுத்தாலும் தீர்க்கமாக யோசித்து செயல்படுவார்களாம். இவர்கள் ரொம்பவே நேர்மையானவர்கள் என்பதால், இந்த குணத்தால் எதிரிகள் அதிகம் இவர்களுக்கு உண்டு.
புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு சூரியன், சனி, செவ்வாய் ரொம்பவே பக்கபலமாக இருப்பதால் இவர்கள் இராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளில் தலைமை பதவி வகிப்பார்கள். மேலும் இவர்கள் பெரும் பட்ட படிப்பால் பல தலைமை பதவி இவர்களை தேடி வருமாம்.
இதையும் படிங்க: புரட்டாசி மாதம் ராசி பலன்கள் 2024 : அதிஷ்டத்தை அள்ள போகும் ராசி இவுங்க!
யோகம்
புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு அவர்களது பூர்வீக சொத்துக்கள் எளிதில் கிடைத்துவிடும். இவர்கள் புத்திசாலியாக இருப்பதால் கடனாளியாக மாட்டார்கள். ஒருவேளை இவர்கள் யாரிடமாவது கடன் வாங்கினாலும் அதை அடைத்தும் விடுவார்கள்.
நோய்கள்
புரட்டாசி மாதம் பிறந்தவர்களுக்கு நரம்பு பிரச்சனை ஏற்படும். இவர்கள் அதிகமாக டென்ஷன் ஆவதால் தலைவலியும் அதிகமாக வரும். மேலும் இம்மாதத்தில் பிறந்த சிலருக்கு பார்வை கோளாறு ஏற்படும். சரியான நேரத்தில் சாப்பிடாதவர்களுக்கும் வயிறு சம்பந்தமான பிரச்சனை ஏற்படும்.
நண்பர்கள்
புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை அதிகமாக இருப்பதால் இவர்களை சுற்றி நண்பர்கள் அதிகமாகவே இருப்பார்களாம். மேலும் இவர்கள் இயற்கையை ரொம்பவே விரும்புவார்களாம். சொல்லப் போனால் இவர்களுக்கு யோகம் அதிகமாகவே கிடைக்குமாம்.
ஒரு வேளை நீங்கள் புரட்டாசி மாதத்தில் பிறந்த நபர் என்றால், மேலே சொல்லப்பட்ட குணநலன்கள் அனைத்தும் உங்களுக்கு ஒத்துப் போகுதா பாருங்கள்.
இதையும் படிங்க: புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?