ஏன் வீடு கட்ட கூடாது?
புரட்டாசி மாதத்தில் தான் வாஸ்து பகவான் தூங்கிக் கொண்டிருப்பார். மற்ற சில மாதங்களில், அவர் விழித்திருப்பதால் அந்த மாதங்களில் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்தால் எந்த தடையுமின்றி, வீடு முழுமையாக கட்டப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும் புரட்டாசி மாதத்தில் வாடகை வீடு சொந்த வீடு எந்த வீடாக இருந்தாலும், வீடு பால் காய்ச்சக் கூடாது என்று சொல்லுகிறார்கள்.
புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்யலாமா?
புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்தால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவே வளைகாப்பு நடத்தலாம். ஆனால், இந்த மாதத்தில் திருமணம், சாந்தி முகூர்த்தம் போன்றவற்றை நடத்துவது நல்லதல்ல.
அதுபோல இந்நாளில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க காது குத்த போன்ற விஷயங்களையும் செய்யலாம் ஆனால் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.