வாழ்க்கைக்கு பணம் ரொம்ப முக்கியம். இன்றைய காலகட்டத்தில் பணம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. ஆனால், சாணக்கிய நீதியின் படி, ஒரு நபரிடம் இருக்கும் சில பழக்கவழக்கங்களே அவரை நிதி நெருக்கடிக்குள் தள்ளிவிடும்.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் பணப் பிரச்சனையை சந்திக்கிறார்கள். பலர் தங்கள் வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் சரியான பேலன்ஸை கடைப்பிடிக்கத் தவறுவதால் நிதி சிக்கல்கள் அதிகரிக்கின்றன. சாணக்கிய நீதியின் படி, வருமானம் பெருகவும், பணப் பிரச்சினைகள் வராமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.
24
பணத்திற்கு மரியாதை கொடுங்கள்:
பணம் சம்பாதித்தாலும் இல்லாவிட்டாலும், அதற்கு மரியாதை கொடுப்பது முக்கியம் என்கிறார் சாணக்கியர். பணத்தை அஜாக்கிரதையாகவும், ஆடம்பரமாகவும் செலவு செய்பவர்களிடம் செல்வம் தங்காது. பணத்தை சரியாக திட்டமிட்டு, புத்திசாலித்தனமாக செலவு செய்வது அவசியம்.
பாசிட்டிவ் சிந்தனை
நிதி சிக்கல்களில் இருந்து மீள, பாசிட்டிவ் எண்ணங்கள் இருப்பது முக்கியம். நெகட்டிவ் எண்ணங்கள் நம் முன்னேற்றத்திற்கு எப்போதுமே தடையாக இருக்கும். பாசிட்டிவ்வாக சிந்திப்பவர்களுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம்.
34
புதிய வருமான வழிகளை உருவாக்குங்கள்:
ஒரே ஒரு வருமானத்தை மட்டும் நம்பி இருப்பது நல்லதல்ல. நிதி நெருக்கடி ஏற்படும் போது, பல வருமான வழிகள் இருந்தால் அது நமக்கு கை கொடுக்கும். அதனால்தான், புதிய வருமான வழிகளை உருவாக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்
ஆச்சாரியாரின் கருத்துப்படி, ஒருவருக்கு பணம் மட்டுமல்ல, நேரமும் முக்கியம். நேரத்தை வீணடிப்பவர்களிடமும் பணம் தங்காது.
மக்கள் பொதுவாக பெரிய செலவுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். சிறிய செலவுகளை கண்டுகொள்வதில்லை. ஆனால், இந்த சின்ன சின்ன செலவுகள்தான் ஒருநாள் பெரிய நிதிப் பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு சிறிய செலவையும் கட்டுப்படுத்துவது நல்லது.
சேமிப்பு
சேமிப்பு மிகவும் முக்கியம் என சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டும். கஷ்ட காலத்தில் இந்த சேமிப்புதான் நமக்கு பெரிதும் உதவும்.