நமது இந்திய நாட்டில் பல்வேறு விதமான சாஸ்திர, சம்பிரதாயங்கஜோதிட குறிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக காகம் ஆனது நம் வீட்டின் முற்பகுதியில் வந்து கரைந்தால்வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள் என்று கூறுவார்கள். காகத்திற்கு உணவு வைப்பது நம் முன்னோர்களுக்கு உணவு கொடுப்பதற்கு சமமாக கருதுவார்கள்.அந்த வகையில் பள்ளி நம் உடம்பில் விழுவதை வைத்து சில பலன்கள் கூறியுள்ளனர்.
நம் அனைவருடைய வீட்டிலும்,வசிக்கக்கூடியது தான் பல்லி. இந்த பள்ளி நாம் சற்றும் எதிர்பாரா நேரத்தில் கத்தும் அல்லது நமது உடம்பில் விழும். இப்படி நம் உடம்பில் பல்லி விழுந்தால் அதற்கு என்ன பலன்கள் என்பதனை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
தலையில்:
தலையில் பல்லி விழுவதால் , அது அவருக்கு இருக்கக்கூடிய கெட்ட சகுணத்தை கூறுகிறது. தவிர அவரது கெட்ட நேரத்தை சமாளிக்க வேண்டிய நிலைமையை நமக்கு எச்சரிக்கை மணியாக சொல்லுகிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி தலையில் விழுவதால் அடுத்தவர்களின் கடும் எதிர்ப்பு உண்டாகும். தவிர உறவினகள் /தெரிந்தவர்கள் போன்றோர்மரணிப்பார்கள் இதனால் கடும் மன வேதனை அடைவார்கள். இதனை போன்ற கெட்ட சகுணத்தை நமக்கு உணர்த்துகிறது.
நெற்றியில் :
பல்லி நெற்றி மீது விழுந்தால் அது நல்ல சகுணத்தை தான் குறிக்கும் . அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமாயின் இடது புறத்தில் விழுந்தால் கீர்த்தி ஏற்படும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்றும் சாஸ்திரகளில் கூறப்பட்டுள்ளது.
புருவத்தில்:
பல்லி புருவத்தில் விழுந்தால், உயர் பதவியில் இருப்பவர்களிடம் இருந்து பாராட்டும் உதவியும் கிடைக்கும் என்று கூறியுள்ளது.
கண்களில்:
கண்கள் / கண்ணங்களின் மீது பல்லி விழுந்தால், ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.
முகத்தில்:
முகத்தில் பல்லி விழுந்தால், வீட்டிற்கு உறவினர்கள் வரவிருப்பதை தெரிந்து கொள்ளலாம்.