வாழை மரம் மகாவிஷ்ணு, மகாலட்சுமி, குரு பகவானுடன் தொடர்புடையதாக நம்பப்படுவதால், வாழை மரத்தை முறையாக பராமரிக்கவில்லை எனில், அது குடும்பத்திற்கு அசுபமாகவும், நஷ்டமாகவும் கருதப்படுகிறது என்கிறது ஜோதிடம். வாழைமரத்துக்கு அசுத்தமான நீரை ஊற்றக் கூடாது. செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாழை மரத்தை வெட்டக்கூடாது. அதை போல பௌர்ணமி அமாவாசை நாட்களிலும் வாழை மரங்களை மறந்தும் வெட்ட கூடாது. வாஸ்து சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள விதிகளை கடைபிடித்து வீட்டில் வாழை மரத்தை வளர்த்தால் குடும்பத்தில் நிம்மதியும், அமைதியும், செழிப்பும் இருக்கும்.
இதையும் படிங்க: தெரியாம கூட இந்த 4 பொருட்கள கீழ போட வேண்டாம்.. மீறினா வீட்டுல கெட்டது நடக்கலாம்!!