மூங்கில் செடி பராமரிப்பு
மூங்கில் செடிகள் காற்று சுத்திகரிப்பானாகவும், சுற்றுப்புறங்களிலிருந்து மாசுக்களை அகற்றவும் உதவுகின்றன. இவை இரண்டு முதல் மூன்று அடி உயரத்திற்கு வளரும். பராமரிக்கவும் எளிதானது. மூங்கில் செடியை நேரடியாக சூரிய ஒளியில் வைப்பதைத் தவிர்க்கவும். கண்ணாடி கொள்கலனில் வைக்கலாம். இதனால் வேர்கள் தெரியும். மூங்கில் செடியை வைக்கும் கண்ணாடி தொட்டியில் மண், உலோகம், மரம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து கூறுகளும் போட வேண்டும். அது எப்படி என்கிறீர்களா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். பானையில் கூழாங்கற்கள், சில நாணயங்கள், மூங்கில் செடி, தண்ணீர், சிவப்பு ரிப்பன்/ பேண்ட் கொண்டு மூங்கில் செடியை கட்டிக் கொள்ளலாம். இதில் 5 கூறுகளும் அடங்கிவிட்டன.
இதையும் படிங்க: வீட்டிற்கு இந்த உயிரினங்கள் வருகிறதா? அப்போ நிச்சயம் செய்வினை இருக்கு!! கவனமாக இருங்க!!