நேர்த்திக்கடன்
திருப்பதி என்றாலே, அங்கு நேர்த்திக் கடனாக தலை முடியை கொடுப்பதுதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். மொட்டை போடுவது தான் பெரும்பாலானாவர்கள் செய்யும் நேர்த்திக்கடன். திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கையை விடவும், ஏன் லட்டு விற்பனையை காட்டிலும் முடி காணிக்கைதான் கோடிகளில் வருமானம் ஈட்டுவதாக சொல்லப்படுகிறது. மற்றொன்று துலாபாரம் காணிக்கையாக கொடுப்பது. இதில் ஏவெல்லம், வாழைப்பழம், அன்னாசி பழம் ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக அளிப்பார்கள் என்றாலும், எடைக்கு எடையாக சில்லரை காசு காணிக்கையாக கொடுப்பது பாரம்பரிய பழக்கம்.