பரிகாரம் 2: வீட்டில் உள்ள தங்க நகையை கிண்ணத்தில் வைத்து தண்ணீர் ஊற்றுங்கள். இதனுடன் தாமரை பூ, பன்னீர்ப் பூ, ஆவாரம் பூ ஆகிய பூக்களை வைக்க வேண்டும். இந்த தண்ணீரின் மேல் உங்கள் கைகளை வைத்து, சொர்ண தேவதையை மனதில் வேண்டிக் கொள்ளுங்கள். அப்போது வீட்டில் தங்கம் நிலைக்க வேண்டும் என மனதார பிரார்த்தியுங்கள். இதன் பிறகு நகைகளை பயன்படுத்தலாம்.
பணம் பெருக!
பணத்தை வைத்திருக்கும் இடத்தில் கண்ணாடியை வைக்க மறக்காதீர்கள். சில வீடுகளில் பீரோவில் உள்ள லாக்கரில் தங்கள் பணத்தை வைத்திருப்பார்கள். அங்கு கண்ணாடி வைத்திருப்பது பணத்தை பெருக்கும்.
இதையும் படிங்க்: துளசியை இப்படி நட்டு வைத்தால் வீட்டில் செல்வம் குவியும்!