மூன்று கோலங்கள்: முருகப்பெருமான் இங்கு அதிகாரத் தோரணையில் அருள்பாலிக்கிறார். அதிகார முருகன் ஆயுதங்கள் இன்றி, அருள் பாலிப்பார்; காலையில் குழந்தை வடிவிலும், மதியம் இளைஞர் வடிவிலும், மாலையில் முதியவர் வடிவிலும் தோற்றமளிப்பார் ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த தன்மையை கொண்டவர் இந்த அதிகார் முருகன். குழந்தை வடிவில் உள்ள முருகனை பார்ப்பது மிகவும் சிறப்பு என்று கூறப்படுகிறது.
கோயில் அமைப்புகள்:
விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானை, நடராஜர். வெளிப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மன், துர்கை, சம்வர்த்த முனிவர் சன்னதிகள் அதிகார முருகன் கோயிலில் உள்ளன. மூலவராக ஸ்ரீ பால சுப்பிரமணியசுவாமி அருள் பாலிக்கிறார்.