இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் அக்ஷய திருதியும் ஒன்றாகும். இது இந்தியாவின் மிக முக்கியமான விழா என்றே கூற வேண்டும்.
அக்ஷயா எனில் சமஸ்கிருதத்தில் 'எப்போதும் குறையாது' என்று பொருள் .திருதியை எனில் 'மூன்றாவது' என்று பொருள். ஆகையால் இந்த நாளில் வாங்கும் எந்த பொருளாக இருந்தாலும் வளமும்,செழிப்பும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த முறை வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதியன்று அக்ஷய திருதியை கொண்டாடப் படவுள்ளது . அட்சய திருதியை அன்று எந்த ஒரு நற்செயலையும் செய்யத் தொடங்கினால் நல்லதொரு பலன் கிடைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்த நன்னாளில் சில பொருட்களை தானமாக கொடுத்தால் நீண்ட ஆயுள், குறையாத செல்வம் மற்றும் வளத்துடன் கூடிய செழிப்பு ஆகியவற்றை பேராக் முடியும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.