சமையல் வேலைகள் முடிந்த பிறகு , முதலில் அடுப்பினை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மிக அவசியமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக, சமையல் வேலை ஆரம்பிக்கும் முன்பு, அடுப்பினை சுத்தம் செய்து விட்டு,அன்னபூரணி அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு எப்போதும் உங்களது அருள் வேண்டும், கஷ்டமே தெரியாமல் இருக்க வேண்டும். வறுமை எதுவும் நெருங்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து விட்டு , உங்களது சமையல் பணிகளை துவக்க வேண்டும்.
இதனை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் சமையல் அறைக்கு எவ்வளவு மதிப்பு தருகிறோம் என்பதனையம் சமையல் அறையில் வசிக்கும் அன்னபூரணி தாயையும் தலை வணங்குவதற்கு சமம். இப்படி செய்வதால் அந்த வீட்டில் அன்னபூரணியின் அருளால் கஷ்டமும்,வறுமையும் நெருங்காது என்பது ஐதீகம் ஐதீகம்.
ஆக சமையல் செய்ய ஆரம்பிக்கும் முன்பு, அடுப்பை சுத்தம் செய்து விட்டு அன்னபூரணியை மனதில் நினைத்து ஒரு முறை பிராத்தனை செய்து விட்டு சமையலை துவக்குங்கள். இவ்வாறு செய்வதால் பல்வேறு விதங்களில் நமக்கு நன்மை உண்டாகும். சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டவர்கள் இதனை கடைபிடித்து வாழ்வில் முன்னேறுங்கள்.
குபேரன், அஷ்டலக்ஷ்மிகளின் அருள் கிடைத்து வாழ்வில் செல்வ செழிப்போடு ஒரு வாழ இந்த தீபத்தை ஏற்றி வழிபடுங்க!