ஏழுமலையானை தரிசிக்க வருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பசியுடன் செல்லக் கூடாது என்ற அடிப்படையில் காலை, பகல், இரவு என மூன்று நேரங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி கோவிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.