அன்று ஹோட்டல் வேலை, தண்ணீர் கேன் விற்ற மாணவன்! இன்று பல கோடி சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோ! யார் தெரியுமா?

First Published Jun 12, 2024, 12:41 PM IST

கர்நாடக மாநிலம் கீறடி என்கிற கிராமத்தில் பிறந்தவர் தான் பிரஷாந்த் ஷெட்டி. சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ரிஷப் செட்டி என்று மாற்றிக் கொண்டார். சிறுவயதிலிருந்தே சினிமாவில் நுழைய வேண்டும் என்பதை கனவாக வைத்திருந்த இவர் எப்படி சினிமாவுக்குள் வந்தார், என்பதை அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 

ரிஷப் ஷெட்டி எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் கன்னட திரையுலகில் கால் பதித்து, இன்று முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார். துணை இயக்குனராக பணியாற்றி 10 வருட போராட்டத்திற்கு பின்னரே இயக்குனராக மாறினார். 
 

இதுகுறித்து தன்னுடைய பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, " சிறு வயதில் இருந்தே சினிமா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே திரையுலகில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்பதை என்னுடைய கனவாகவே வைத்திருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் என்னால் ஒரு படம் கூட பார்க்க முடியாது.  குடும்ப சூழ்நிலை காரணமாக என்னிடம் படம் பார்க்க பணம் இல்லை.

Vijay Devarakonda: ஜாதகத்தின் படி பெயரை மாற்றுகிறாரா விஜய் தேவரகொண்டா! பரபரப்பு முடிவுக்கு காரணம் என்ன?
 

Rishab Shetty

என் பெற்றோர் கஷ்டப்பட்டு கல்லூரியில் பி.காம் சேர்த்து விட்டனர்.இரண்டாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, கிடைக்கும் அனைத்து வேலைகளையும் செய்ய துவங்கினேன். ஹோட்டல் வேலை முதல் தண்ணீர் கேன் விற்பனை, ரியல் எஸ்டேட் என பல வேலைகளை செய்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்தே என்னுடைய படிப்பை முடித்தேன்.

மேலும் சினிமாவுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எனவே அதில் எப்படி நுழைவது என்கிற பெரிய சந்தேகம் எனக்குள் இருந்தது. அந்த சமயத்தில் தான் ஒரு கன்னட நடிகரின் வாழ்க்கை வரலாற்றை படிக்க நேர்ந்தது. அவர் ஒரு உதவி இயக்குனராக இருந்து பின்னர் நடிகராக மாறியவர் என்பதை தெரிந்து கொண்டு, பிலிம் மேக்கிங் படிப்பை முடித்தேன்.

கமல்ஹாசன் முதல் இளையராஜா வரை... ஏராளமா பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் சார்லி மகன் திருமண ரிசப்ஷன் போட்டோஸ்!

2004 ஆம் ஆண்டு உதவி இயக்குனராக பணியாற்ற துவங்கினேன். அதன் பின் ஒரு சில படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு 'ரிக்கி' எனும் படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானேன். இதை தொடர்ந்து நான் இயக்கிய 'கரிக் பார்ட்டி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது என தெரிவித்துள்ளார்.
 

குறிப்பாக ரிஷப்ஷட்டி இயக்கி - நடித்த 'கந்தாரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது மட்டும் இன்றி இவரை உலகம் முழுவதும் பிரபலமான இயக்குனராகவும் பார்க்க வைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார். 

நடிகையுடன் கள்ள தொடர்பு! கையும் களவுமாக சிக்கினார்.. யுவா பற்றி சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகள் கூறிய ஷாக் தகவல்
 

Latest Videos

click me!