குறிப்பாக இறுதி இரண்டு எபிசோடுகளில் இடம்பெறும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் கதையின் தாக்கத்தை அதிகரிக்கின்றன. விவேக் பிரசன்னாவின் இயல்பான நகைச்சுவை வசனங்களும், சீரியஸான கதையிலும் சிறிய இலகுவான தருணங்களை உருவாக்குகின்றன.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கதையின் மர்ம உணர்வை வலுப்படுத்துகின்றன. குறிப்பாக விசாரணைக் காட்சிகளில் பின்னணி இசை கூடுதல் பதற்றத்தை உருவாக்குகிறது.
இருப்பினும், சில இடங்களில் சசிகுமார் மற்றும் அபர்ணா தாஸ் தொடர்பான காட்சிகள் கதையின் வேகத்தை சற்று குறைப்பதாக தோன்றுகிறது. அவை பிரதான கதைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடரில் சில பகுதிகளை சுருக்கியிருந்தால், திரைக்கதை இன்னும் வேகமாக இருந்திருக்கும்.