கே.என். நேரு வழக்கில் ஊமையாக இருப்பது ஏன்..? - லஞ்ச ஒழிப்புத் துறையின் முகமூடியைக் கிழித்த நீதிமன்றம்..!

Published : Mar 25, 2026, 09:30 PM IST

லஞ்ச ஒழிப்புத் துறை தனது சட்டப்பூர்வமான கடமையிலிருந்து தவறுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆதாரங்களின் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

PREV
13
888 கோடி ரூபாய் முறைகேடு

தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் 888 கோடி ரூபாய் அளவிலான வேலைவாய்ப்பு முறைகேடு புகாரில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீதான இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத் தயங்குவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த காலங்களில் நகராட்சி நிர்வாகத் துறையில் உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பாக திரட்டப்பட்ட 232 பக்கங்கள் கொண்ட விரிவான ஆதாரங்களை, அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி-யிடம் முறையாக ஒப்படைத்தது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நீண்ட நாட்களாகியும் அந்தப் புகாரின் மீது எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது.

23
நீதிமன்றத்தின் சவுக்கடி கேள்விகள்

வழக்கை விசாரித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு அளித்த 'பூர்வாங்க விசாரணை நடைபெறுகிறது' என்ற பதிலைக் கேட்டு கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள் முன்வைத்த மூன்று முக்கிய வாதங்களில் அமலாக்கத்துறையே முறையான ஆதாரங்களைக் கொடுத்த பிறகு, அதனை வைத்து வழக்குப் பதிவு செய்யாமல் 'பூர்வாங்க விசாரணை' என்ற பெயரில் காலத்தைக் கடத்துவது ஏன்?

ஒரு புகாரில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே போதுமானது, உடனே எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், இங்கே லஞ்ச ஒழிப்புத் துறையே ஒரு சிறிய அளவிலான விசாரணையை நடத்தித் தீர்ப்பு சொல்ல முயற்சிப்பது சட்டப்படி தவறு.

சட்டம் அனைவருக்கும் சமம்: குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சராக இருந்தாலும், சட்டத்தின் பார்வையில் அவர் ஒரு சாதாரண குடிமகனே. அவருக்கு என்று தனிச்சலுகை வழங்கி சட்ட விதிகளைத் தளர்த்த முடியாது.

33
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு

லஞ்ச ஒழிப்புத் துறை தனது சட்டப்பூர்வமான கடமையிலிருந்து தவறுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆதாரங்களின் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கை அடுத்த கட்ட விசாரணைக்காக ஒத்திவைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories