இந்த விலகல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மத்திய தலைமை அண்ணாமலையை ஒதுக்கி வைக்கும் முயற்சியாக இதை சிலர் பார்க்கிறார்கள். அதிமுகவுடனான கூட்டணி மீண்டும் உறுதியான நிலையில், அண்ணாமலையின் அதிரடி பாணி கூட்டணிக்கு பாதகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட வெறும் 6 தொகுதிகள் மட்டுமே என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. சிலர் இதை அண்ணாமலையின் டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் உத்தியாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலையை சமாதானப்படுத்த தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவவிநாயகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.