தற்போது கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு ஆபத்து இருப்பதால், அவரது அரசியல் பயணங்கள் தடைபடலாம் எனக் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டுள்ள உள்துறை அமைச்சகம், தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய பாதுகாப்பு படையினரிடம் விஜயின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா? என விளக்கம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, விஜயின் பாதுகாப்பை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகரிக்கப்படும் நிலையில், விஜயின் அரசியல் பயணத்தை பாதுகாக்கவும், 2026 தேர்தலுக்கு முன் தீவிர பரப்புரை மேற்கொள்ள உதவும் எனக் கூறப்படுகிறது.