முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கரூர் கூட்ட நெரிசலுக்குக் காரணம் தவெகவின் ட்திட்டமிடலே காரணம் என்றும், விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் கூட்டம் கலைந்து நெரிசல் ஏற்பட்டது. எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் கூடியது. போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை. காவல்துறையினர் எச்சரித்தும் தவெக நிர்வாகிகள் கேட்கவில்லை. எனவே உயிரிழப்புகளுக்கு தவெகவே பொறுப்பு என்று குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லியில் நடந்த விசாரணையில் தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர்.நிர்மல்குமார் ஆஜராகினர். அப்போது திமுகவ சிக்க வைக்கிற கேள்விகளுக்கு ஆதவ் அர்ஜூனோ, புஸ்ஸி ஆனந்தோ பிடி கொடுக்காமல் பதில் சொன்னாதாக கூறப்படுகிறது. முதல் நாள் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மறுநாள், மூன்றாம் நாள் விசாரணை சீரியஸாக தொடர்ந்துகிட்டே போனது. புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூன் போன்றோரிடம் தனித்தனியாக ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.