Thirumavalavan : மாஸா.. கெத்தா.. கோட் சூட்டில் ஹீரோக்களை மிஞ்சும் ஸ்டைலில் திருமா.. தெறிக்கவிடும் போட்டோஸ்!

Published : Dec 10, 2021, 12:35 PM ISTUpdated : Dec 10, 2021, 12:50 PM IST

கோர்ட் சர்ட் போட்டு போட்டோ ஷூட் நடத்துவது, ஸ்டைலிஸாக ஹேர்கட் செய்து கொள்வது என ஆர்வம் காட்டும் திருமாவளவன், டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். அங்கு அவர் தொப்பி அணிந்து கோர்ட் சட்டை அணிந்து படு ஸ்டைலாக வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

PREV
14
Thirumavalavan : மாஸா.. கெத்தா.. கோட் சூட்டில் ஹீரோக்களை மிஞ்சும் ஸ்டைலில் திருமா.. தெறிக்கவிடும் போட்டோஸ்!

கோர்ட் சர்ட் போட்டு போட்டோ ஷூட் நடத்துவது, ஸ்டைலிஸாக ஹேர்கட் செய்து கொள்வது என ஆர்வம் காட்டும் திருமாவளவன், டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். அங்கு அவர் தொப்பி அணிந்து கோர்ட் சட்டை அணிந்து படு ஸ்டைலாக வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

24

ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு ஊருக்கு வெளியில் ஒதுக்கப்பட்டு கிடைக்கிற  சேரிகள் தலைநிமிர்வே தன் ஒரே லட்சியம் என அரசியல் பயணத்தை துவக்கி இன்று தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உயர்ந்து நிற்கும் தலைவர் தமிழகத்தில் ஒருவர் உண்டு என்றால் அது திருமாவளவனாகத்தான் இருக்க முடியும். தமிழகத்தை அரைநூற்றாண்டு காலம் ஆட்சி செய்த திராவிட இயக்கத்தின் பன்முகத் தன்மைகொண்ட தலைவராக வாழ்ந்து மறைந்த கலைஞர் கருணாநிதிக்குப் பின்னர் கொள்கையாளர், பேச்சாளர், ஓவியர், கவிஞர், நடிகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், முன்னாள் அரசு ஊழியர் என பன்முகத் தன்மைக்கு சொந்தக்காரர் திருமாவளவன் என்பதை எவறும் மறுக்க முடியாது.

34

எத்தனையோ அரசியல்வாதிகள் வருகிறார்கள் போகிறார்கள், ஆனால் அவர்கள் அத்தனை பேரும் வரலாற்றில் இடம் பிடிப்பதில்லை, அத்தனை பேரும் அவ்வளவு எளிதில் நம்மை கடந்து போய் விடுவதுமல்லை. அவர்கள் நம்மில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு போகின்றனர், அப்படி நாம் அனைவரும் எளிதில்  கடக்க முடியாத ஒரு தலைவராக, ஒவ்வொருவர் மனதிலும் நம்பிக்கையோடு போராடு என்ற தாக்கத்தை ஏற்படுத்தியவர் திருமாவளவன் என்றார் மிகையல்ல. சாதாரண ஏழை தலித் குடும்பத்தில் பிறந்து, லட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் ஒப்பற்ற தலைவராக, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் தனிப்பெரும் இயக்கத்தை உருவாக்கி, வெற்றிகரமான அரசியல் தலைவராக வலம் வருகிறார் திருமாவளவன்.

44

திருமாவளவன்  தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்களுக்கு விடாமல் குரல் கொடுத்து வருகிறார். அவரது எழுச்சியால் ஈர்க்கப்பட்டதால் அவரை போல உடை அணிவது, மீசை வைத்துக்கு கொள்வது என இவருக்கு என்று ரசிகர் பட்டாளமே உள்ளது. அதேநேரத்தில் திருமாவளவன் மீது விமர்சனங்களும் எழுகின்றனர். சாதி அரசியல் செய்கிறார், அவருடைய கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இந்து மதத்திற்கு எதிராக செயல்படுகிறார் திருமா...’ போன்றவை மாற்றுக்கட்சியினரால் இவர் மீது வைக்கப்படும் அடிப்படைக் குற்றச்சாட்டுகளாக இருக்கின்றன. `ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுப்பவன்’ என்பதே விமர்சனங்களுக்கு திருமாவளவன் கொடுக்கும் பதிலாக இருக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories