நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!

Published : Dec 11, 2025, 12:27 PM IST

என்னுடைய நேருக்கு நேர் நேர்காணலில் நான் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி வழக்கம் போல் சிலர் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். அதன் காரணமாக, நான் மதிக்கும் அந்த சமூக மக்கள் வேதனைப் படுவது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது.

PREV
14

தமிழகத்தின் பெருந்தலைவர், காமராரை 1903 முதல் 1975 வரை போற்றும் அளவுக்கு, அவரது சாதனைகள் இன்றும் தமிழக மக்களின் நினைவில் உள்ளது.அவர் 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராக இருந்து, இலவச கல்வி, மின்சாரம், தொழில் மயமாக்கல் போன்ற புரட்சிகரமான சீர்திருத்தங்களை செய்தவர். ஆனால், அண்மையில்யூடியூபர் முக்தார் அகமது தனது "மை இந்தியா 24x7" சேனலில் காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு கருத்துகளை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்தாரின் வீடியோவில் காமராஜரை திறமையற்ற முதல்வர் என்று சித்தரித்து, காமராஜர் முதல்வராக சரியாக செயல்படவில்லை என்பதால், ஜவஹர்லால் நேரு டெல்லிக்கு வா என்று அழைத்து, அவரை தண்டித்ததாகக் கூறினார். உண்மையில், காமராஜர் தன்னார்வலாக 1963-ல் ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார்.

காமராஜர் கல்லணை போன்ற அணையா கட்டினாரா?" என்று கேலி செய்து, அவரது அணைகள், பள்ளிகள் போன்ற வளர்ச்சி திட்டங்களை ஊழலுடன் தொடர்புபடுத்தினார். காமராஜர் இறக்கும்போது வீட்டில் 4 ரூபாய் மட்டுமே இருந்ததாக வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஒரு இன்டர்வியூவில், விருந்தினரை "நாடாரா?" என்று நக்கல் தொனியில் கேட்டு, காமராஜரின் நாடார் சமூக பின்னணையை இழிவுபடுத்தினார் முக்தார்.

24

இந்த கருத்துகள் ஆதாரமற்றவை என்பதை காமராஜரின் வாழ்க்கை வரலாறு மறுக்கிறது. அவர் 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, இந்தியாவின் கிங் மேக்கராக இரண்டு பிரதமர்களான லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை தேர்ந்தெடுத்தவர்.முக்தாரின் இந்த அவதூறுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. காங்கேயத்தில் நாடார் பேரவை, யூடியூபர் முக்தாருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தது. திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

அதிமுக எம்.பி.,யான இன்பதுரை, "காங்கிரஸ் ஏன் வாய் திறக்கவில்லை?" என்று விமர்சித்தார். பாஜக தலைவர் கரு நகராஜன், மத்திய அமைச்சர் எல். முருகனிடம் வீடியோவை தடை செய்ய கோரினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேஷ் குமார், "முக்தாரை உடனடி கைது செய்யுங்கள்" என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தினார். நூற்றுக்கணக்கானோர் முக்தார் மீது புகார் அளித்தனர். ஆனால், அவர்மீது பல நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு பின்னணியில் திமுக அரசு இருப்பதாகவும், அவரை ஸ்டாலின் அரசு காப்பாற்றி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தவெக சார்பாக தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, முக்தாரை வதந்தி பரப்புபவராகக் குற்றம்சாட்டியது.

சமூகவலைதளங்களில் #காமராஜர், #முக்தார் போன்ற ஹேஷ்டேக்கள் ட்ரெண்ட் ஆகின. பலர் இது திமுக ஆட்சியில் காமராஜருக்கு ஏற்படும் அவமானங்கள் என்று விமர்சித்தனர்.

34

தமிழக காவல்துறை முக்தாருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. இது காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்தாரின் வீடியோ இன்னும் ஆன்லைனில் உள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் அது நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. காமராஜர் போன்ற தலைவர்களை இழிவுபடுத்துவது, அவரது பாரம்பரியத்தை பாதுகாக்க, சட்ட நடவடிக்கை தேவை என்று பலர் வலியுறுத்துகின்றனர். இது தமிழக அரசியலில் பழைய தலைவர்களின் புகழை பாதுகாக்கும் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இந்நிலையில் காமராஜர் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் முக்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘வணக்கம். என்னுடைய நேருக்கு நேர் நேர்காணலில் நான் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி வழக்கம் போல் சிலர் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். அதன் காரணமாக, நான் மதிக்கும் அந்த சமூக மக்கள் வேதனைப் படுவது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. காமராஜர் ஆட்சி குறித்து சில முக்கிய பிரமுகர்கள் முன் வைத்து வந்து வந்த விமர்சனங்கள் மற்றும் வெவ்வேறு சேனல்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்த கருத்துக்களின் அடிப்படையில், அரசியல் பார்வையில் ஒரு பத்திரிக்கையாளராக என்னுடைய நேர்காணலில் அதை வாசித்து விளக்கம் பெற முயற்சித்தேன். எதுவும் என்னுடைய தனிப்பட்ட விமர்சனங்களோ கருத்தோ அல்ல.

44

நான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நோக்கில் பயணிக்கிறவன். ஆகவே என்னுடைய நேர்காணல் மூலமாக குறிப்பிட்ட சமூக மக்களின் உணர்வுகள் புண்பட்டு இருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எப்போதும் போல, நாம் ஒற்றுமையாக இருப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories