அந்த சூழ்ச்சியின் ஒரு பகுதி தான் இப்போது நடக்கின்ற எஸ்.ஐ.ஆர் என்கிற திட்டம். திமுகவுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய வாக்குகளை எல்லாம் எப்படியாவது முடக்க வேண்டும், நீக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மை மக்கள், பெண்கள், ஒதுக்கப்பட்ட மக்களுடைய வாக்குகளை எல்லாம் நீக்க வேண்டும். இதுதான் அவர்களை ஒரே நோக்கம். இந்த சூழ்ச்சியை முறியடிக்கின்ற வகையில் நீங்கள் அத்தனை பேரும் உங்களுடைய வாக்குச்சாவடியில் உங்களுடைய வாக்குகளை முதலில் நீங்கள் சரி செய்ய வேண்டும். மிகுந்த கவனத்தை கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். 2026 நமது கழக கூட்டணி மீண்டும் வெற்றி பெற வேண்டும். நிச்சயம் வெற்றி பெறுவோம்.
நமது கழகம் ஏழாவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும். நம்முடைய தலைவர் கடந்து இரண்டாவது முறையாக நிச்சயமாக முதல்வர் நாற்காலியில் உட்காருவார். தமிழ்நாட்டு மக்கள் உட்கார வைப்பார்கள். இந்த வெற்றியை உறுதியாக கிடைக்கும். அதற்காக அடுத்த நான்கு மாதங்களும் நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.