இது அதிமுக ஆட்சியின் திட்டம், அதை வரவேற்கிறோம். அதிமுக ஆட்சி திட்டம் சிறப்பான திட்டம் என்று ஏற்றுக்கொண்டு இன்று கொடுத்திருக்கிறார். கொடுப்பது சரி, கல்லூரி ஆரம்பிக்கும்போதே கொடுத்திருக்க வேண்டும். கொடுத்திருந்தால் லேப்டாப் வாங்கி இருக்க மாட்டார்கள். மாணவர் சுமை குறைந்திருக்கும். பொம்மை முதல்வர் அதனால் ஒன்றும் தெரியவில்லை.
தொழிற்துறை அமைச்சரும், ஸ்டாலினும் நிறைய முதலீடுகளை கொண்டுவந்தோம் என்று சொல்கிறார்கள். அப்படியெனில் வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று கேட்டால் வெள்ளை பேப்பரை நீட்டுகிறார். அதுதான் உண்மை எதுவுமே செய்யவில்லை.
திமுகவில் பொன்முடி இருந்தால், அவர் மகன் தான் வருவார். நேரு என்றால் அவர் மகன் தான் வருவார். திண்டுக்கல் பெரியசாமி என்றால் மகன் தான் வருவார். இப்படி வாரிசுதான் வரமுடியும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ யார்? சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்படிப்பட்டவருக்குக் கூட பதவி கிடைக்கும் கட்சி அதிமுக. இங்கு, ஏழை, பணக்காரன் பாகுபாடு பார்ப்பதில்லை’’ எனப்பேசினார்.