
விஜய் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்கிறார். ஆனால் திமுகவைப்போல கொள்கை எதிரி பாஜகவை விமர்சிப்பதில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவை விஜய் தீர்க்கமாக எதிர்த்தால் அதன் பலனை திமுக அறுவடை செய்யும் என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி.
இதுகுறித்து அவர், ‘‘விஜய் தன்னை தெளிவாக நிலை நிறுத்திக் கொள்கிறார். அரசியல் தலைவர்கள் தான் எங்கே நிற்கிறோம் என்படை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.இரண்டாவது தன்னுடைய எதிரியை வரையறுக்க வேண்டும். இந்த இரண்டையும் விஜய் செய்து வருகிறார். திமுகவை தீய சக்தி என்று என்றைக்கோ எம்,ஜி,ஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை இன்றைக்கு விஜய் சொல்கிறார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவினர் கூட பயன்படுத்தவில்லை. அதிமுகவினரின் திமுக எதிர்ப்பு ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு நீங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைக்கு விஜய் அந்த பழைய இடத்துக்கு போகிறார். அது தேர்தலில் விஜய்க்கு லாபத்தை கொடுக்கலாம். ஏனென்றால் தமிழக அரசியலின் மையக்கரு என்பது திமுக, எதிர்ப்பு திமுகதான். திமுக எதிர்ப்பை யார் ரொம்ப வலிமையான பேசுறாங்களோ அவர்களுக்கு தான் அதிமுகவே சொந்தமாகி இருக்கிறது. ஜானகி அம்மா தோற்று ஜெயலலிதா வந்ததன் காரணமே அதுதான். அதற்கு வரலாற்று கான்செப்ட் இருக்கிறது. திமுகவை தீயசக்தி எனச் சொல்வதன் மூலமாக விஜய் எதிரியை வரையறுக்கிறார். இரண்டாவது ஒரு நான் வந்து எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்துவேன் எனச் சொல்வதன் மூலமாக தாண்டி கடைசியாக முடிக்கும்போது செங்கோட்டையனை பாராட்டுகிறார்.
அங்கிருந்து இன்னும் சிலர் வருவார்கள். அவர்களுக்கு வந்து முக்கியத்துவம் தருவேன் என்று விஜய் அதிமுகவினருக்கு வலையைத்தான் விரிக்கிறார். இது அதிமுக வாக்கு வங்கிய குறிவைத்து அவர் செய்யக்கூடிய ஒரு காரியம் தான். இதற்கு மேல் தவெக-அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கெல்லாம் எல்லாம் வாய்ப்புகள் குறைவு. ஆனால் தவெக கூட்டணிக்கு வரும் அதிமுக கடைசி வரைக்கும் நம்பிக்கையோடு தான் இருப்பார்கள். ஏனென்றால் வேறு எதற்கும் பரிந்து பேசாத எடப்பாடியார் விஜய் விஷயத்தில் கரூர் விபகாரத்தில் பேசும்போது ரொம்ப அதிகமாகத் தான் பேசினார். இன்றைக்கு விஜயின் பேச்சுக்கு பிறகு என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் வருவார் எனக்கூறப்படும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த வாக்குகளை கவர்ந்து திமுகவுக்கு தான் மட்டும் தான் எதிரி என்று அந்த இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.
டிடிவி.தினகரன் அதிமுக வேட்டி கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஓபிஎஸிக்கும் எதிர்ப்பு வந்தது. விஜயகாந்த் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தக்கூடாது என்றார்கள். ஆனால், விஜய் விஷயத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை விஜய் பயன்படுத்தினாலும் அதிமுக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இது தேர்தல் கணக்கு தான். அதிமுகவுக்கு 2011 தேர்தலில் விஜயகாந்த் தேவைப்பட்டது. அந்த நிலைதான் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு. அதனால் தான் கரூர் சம்பவத்துக்கு பிறகு இவ்வளவு தூரம் வழிய போய் ஆதரவு கொடுத்தது. அதன் பிறகு இப்போது விஜய் பேச்சுக்கு பிறகும் கூட அவர்கள அமைதியாக இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு தவெக கூட்டணிக்கு வரும் என ஒரு நம்பிக்கை இருக்கிறது. என்னவோ விஜய் வந்து விடுவார் என்ற ஒரு நம்பிக்கை இன்னமும் அவர்களுக்கு இருக்கிறது.
விஜயகாந்த் கதை வேற, இது வேற. அன்றைக்கு ஜெயலலிதா இருந்தார். இன்னைக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை. அதிமுக- தவெக கூட்டணி முதலில் அமையாது. அப்படியே கூட்டணி அமைத்தாலும் அது வெற்றிகரமாக இருக்காது. விஜய் தனியாகத் தான் போகப் போகிறார். அதிமுக வாக்குகளைத்தான் குறிவைக்கிறார் விஜய். அதில் சந்தேகம் இல்லை. திமுகவுக்கும் இதில் கவலைப்படுவதற்கு நிறைய இருக்கிறது, ஏனென்றால் பெண்கள் வாக்குகள் விஜய்க்கு அதிகமாக செல்லும். விஜய் பாஜகவை எதிர்க்காமல் இருக்கிறார். திருப்பரங்குன்றம் விஷயத்தை கடந்துவிட்டு இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு கட்சி இருக்க முடியாது. திமுகவுக்கு மாற்று தவெகதான் என்று சொல்லக்கூடிய ஒரு கட்சி திருப்பரங்குன்றம் விசயத்தை கடந்து போக முடியாது. அவர் விஜய் வாய்திறக்காமல் இருக்கிறார் என்றால் அது அவரடு நிலைப்பாடு. அவர் பேச மறுக்கிறார் என அது குறித்து புலம்பி என்ன பயன்?
அவர் பேச மறுகிறார் எனச் சொல்வதில் எந்த பிரயோஜனமும் கிடையாது. திமுக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துவிட்டு மக்களிடம் போகும்பொழுது அந்த லோக்கல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டூம். இன்னொரு விஷயம் விஜய் பாஜகவை தீர்க்கமாக எதிர்த்தால் அதனுடைய பலன்கள் திமுக தான் அறுவடை செய்ய வேண்டும். ஆகையால் பாஜக மீடது நாம் ஏன் கையை வைக்கவேண்டும் என்ற எண்ணமும் விஜய்க்கு இருக்கலாம். அதைவிட முக்கியமாக அவருக்கு பாஜகவிடம் ஒரு தயக்கம் இருக்கிறது. பாஜக எதிர்ப்பு என்பதை தவெக அதிகப்படுத்தினால் அதன் லாபத்தை திமுக தான் அறுவடை செய்யும்’’ என்கிறார் ஆர்.எஸ்.மணி.